சென்னையில் கடந்த 10 நாள்களில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.380வரை உயர்ந்துள்ளது. அதேபோல் 24 காரட் தூயத் தங்கம் விலை ரூ.380 வரை உயர்ந்துள்ளது.
தற்போது 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.5415 ஆக உள்ளது.
இது நேற்றைய விலையை விட ரூ.5 குறைவாகும். இந்த நிலையில், ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800வரை திடீரென அதிகரித்தது.
இந்த விலை உயர்வுக்கு இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தங்கம் சென்னையில் சவரனுக்கு ரூ.800வரை அதிகரித்து காணப்படுகிறது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் காரணமாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 54 டாலர் வரை அதிகரித்துள்ளது. வெள்ளி விலையில் கடந்த 3 நாள்களாக மாற்றம் இல்லை.
எனினும் கடந்த 9ஆம் தேதி வெள்ளி கிலோ ரூ.500 அதிகரித்து காணப்பட்டது. தற்போது கிலோ வெள்ளி சென்னையில் ரூ.75,500 ஆக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“