/tamil-ie/media/media_files/uploads/2020/04/b307.jpg)
பி.எஃப் திட்டத்தில்7.1% வட்டி வழங்கப்படுகிறது.
public-provident-fund | நீங்கள் ஒரு நல்ல இடத்தில் முதலீடு செய்தால் எந்த வகையான சந்தை அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை. இந்நிலையில், அரசின் ஒரு அற்புதமான திட்டத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
மத்திய அரசின் இந்தத் திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.
பிபிஎஃப் முதலீடு
தற்போது, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதில் முதலீடு செய்யப்பட்ட பணம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது.
PPF-ல் மாதந்தோறும் ரூ.3,000 முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் முதிர்ச்சியின்போது, ரூ.9 லட்சத்துக்கு மேல் ரிட்டன் பெறலாம்.
ரூ. 10 லட்சம் ரிட்டன் பெறுவது எப்படி?
இதற்கு முதலில் உங்கள் அருகில் உள்ள வங்கி அல்லது தபால் நிலையத்தில் PPF கணக்கைத் தொடங்க வேண்டும். கணக்கைத் தொடங்கிய பிறகு, உங்கள் PPF கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000 சேமித்து, ஆண்டுக்கு ரூ.36,000 முதலீடு செய்ய வேண்டும்.
தற்போதைய 7.1 சதவீத வட்டி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு திட்டம் முதிர்வு பெறும் நேரத்தல், உங்களிடம் ரூ.9,76,370 இருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் நீங்கள் மொத்தம் 5,40,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு வட்டியாக மொத்தம் ரூ.4,36,370 கிடைக்கும்.
அத்தகைய சூழ்நிலையில், முதிர்ச்சி காலத்தில் நீங்கள் சுமார் ரூ.9,76,370 பெறுவீர்கள். இந்தத் திட்டம் முதிர்ச்சியின் போது நீங்கள் பெறும் பணத்தின் மூலம், உங்கள் எதிர்காலம் தொடர்பான முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற முடியும்.
குறைந்தப்பட்ச முதலீட்டுத் தொகை
PPF இல் குறைந்தபட்சம் ரூ. 500 முதல் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
15 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பிறகு, உங்கள் முதலீட்டு காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.