/tamil-ie/media/media_files/uploads/2018/02/adidas.jpg)
அடிடாஸ் தனது நிறுவனத்தை தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது. சீனாவுக்கு வெளியே முதல் ஆசிய ஜிசிசி நிறுவனம் இதுவாகும்.
business | அடிடாஸ், சீனாவிற்கு வெளியே ஆசியாவிலேயே தனது முதல் மற்றும் ஒரே உலகளாவிய திறன் மையத்தை (ஜிசிசி) சென்னையில் அமைக்கத் தயாராகி வருவதாக வியாழக்கிழமை (ஜன.4) வெளியான ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
உலகளாவிய பெருநிறுவனங்கள் இந்தியாவில் ஏராளமான மென்பொருள்/தொழில்நுட்பத் திறன்களைப் பயன்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில், அடிடாஸின் இந்த நுழைவு சமீபத்திய பன்னாட்டு GCC முதலீடுகளை வலுப்படுத்தும்.
அடிடாஸ் அதன் குளோபல் பிசினஸ் சர்வீசஸ் (ஜிபிஎஸ்) அமைப்புகளுக்கும், அதன் செயல்பாடுகளுக்கு அகில் கபூர் தலைமை தாங்குகிறார்.
கபூர் ஜிபிஎஸ் உலகளாவிய கொள்முதலின் துணைத் தலைவராகவும், ஜிபிஎஸ் இந்தியாவின் தலைவராகவும் உள்ளார்.
ஜெர்மன் நிறுவனத்தின் சென்னை ஹப் ஆனது, தற்போது போர்டோ (போர்ச்சுகல்), டேலியன் (சீனா), பொகோட்டா (கொலம்பியா) மற்றும் வட அமெரிக்காவில் உள்ள அடிடாஸின் மையங்களுடன் தடையின்றி ஒருங்கிணைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.