சுதந்திர தின சிறப்பு சலுகை : ரூ. 250 கேஷ்பேக் வழங்கும் ஏர்டெல்!

முதலில் முந்தும் 300 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்

முதலில் முந்தும் 300 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஏர்டெல்

ஏர்டெல்

சுதந்திர தின சிறப்பு சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு ரூ. 250 கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது ஏர்டெல்.

ஏர்டெல் சுதந்திர தின சிறப்பு சலுகை :

Advertisment

டெலிகாம் சந்தையில்ஜியோவிற்கும் – ஏர்டெல்லிற்கும் இடையேயுள்ள போட்டி நாடு அறிந்த ஒன்று. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள இந்த இரண்டு நிறுவனங்களும் மாறி மாறி அறிவிக்கும் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன.

குறிப்பாக சிறப்பு நாட்கள் மற்றும்  விசேஷ நாட்களில்  இவர்கள் வெளியிடும்  கேஷ்பேக் சலுகை,  ரீசார்ஜ் கூப்பன்கள் போன்றவை  மக்களை வெகுவாக கவர்கின்றன.

ஜியோவின் வருகைக்கு பின்னர் சொல்லவே வேண்டாம்  2ஜி யூசர்கள் எல்லாம் 4ஜிக்கு மாறினார்கள். அத்துடன் ரீசார்ஜ் திட்டங்களில் கேஷ்பேக் ஆஃபர்கள், கிஃப்ட் வவுச்சர்கள், கூப்பன்கள் என ஜியோ அடுத்த பாய்ச்சலுக்கு பாய்ந்தது.

Advertisment
Advertisements

அதனைத் தொடர்ந்து. ஏர்டெல் நிறுவனமும்  பல சலுகைகளை அறிவித்தது.  சந்தையில் இந்த நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க பிஎஸ்என்எல், வோடஃபோன் போன்ற நிறுவனங்களும் அவ்வப்போது குறைந்த செலவில் ரீசார்ஜ் திட்டங்கள், இலவச எஸ் எம் எஸ் வசதி போன்றவற்றை வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் இன்று தனது வாடிகையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சுதந்திர தின சிறப்பு சலுகையாக  ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 250 கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.

இந்த கேஷ்பேக் முதலில் முந்தும் 300 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுக் குறித்து முழு விபரத்தை ரீசார்ஜ் கடைகள் மற்றும் ஏர்டெல்   செயலில் தெரிந்துக் கொள்ளலாம் என்று, கூறப்பட்டுள்ளது.

Airtel

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: