/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-100.jpg)
ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் ரூ. 597 க்கு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 168 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவைகள் தடையின்றி வழங்கப்படும்.
டெலிகாம் சந்தையில், ஜியோவிற்கும் – ஏர்டெல்லிற்கும் இடையே நடைபெறும் போட்டாப்போட்டி நாடு அறிந்த ஒன்று. வாடிக்கையாளர்களை, கவரும், அவர்களை தக்க வைத்துக் கொள்ளவும் இந்த இரண்டு நிறுவனங்கள் நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகிறது.
இவர்களுக்கு இடையே உள்ள போட்டியில், வாடிக்கையாளர்கள் நல்ல பயனை பெற்று வருகின்றன. ஜியோவின் வருகை பின்னர் சொல்ல வேண்டாம். 2ஜி யூசர்கள் எல்லாம் 4ஜிக்கு மாறினார்கள். அத்துடன் ரீசார்ஜ் திட்டங்களில் கேஷ்பேக் ஆஃபர்கள், கிஃப்ட் வவுச்சர்கள், கூப்பன்கள் என ஜியோ அடுத்த பாய்ச்சலுக்கு பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து. ஏர்டெல் நிறுவனம் சில குறிப்பிட்ட ஸ்மார்ட்ஃபோன்களை வாங்கினால் அதில், ஏர்டெல் சார்பில் கேஷ்பேக் சலுகைகளை வழங்குவதாக தெரிவித்தது.இதுப்போல பல சலுகைகளை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அறிவித்து வந்தனர்.
அந்த வகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.597/-என்ற காம்போ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் அனைத்து வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவைகள் 168 நாட்களுக்குத் தடையின்றி வழங்குகிறது.
புதிய பிளான், அதிக வாய்ஸ் கால் பயனர்களை மனதில் வைத்து ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.