வருடம் ரூ. 330 மட்டும் கட்டுங்க; ரூ2 லட்சம் உதவி: இந்த தருணத்தில் இந்த ஸ்கீம் முக்கியம்

காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு தொகையை வழங்க அதிக காலம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இந்த திட்டத்தில் அந்த பிரச்சனை ஏதும் இல்லை.

காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு தொகையை வழங்க அதிக காலம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இந்த திட்டத்தில் அந்த பிரச்சனை ஏதும் இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana : இந்த கொரோனா காலம் காப்பீடுகளின் தேவை என்ன என்று நமக்கு நன்றாகவே உணர்த்தியுள்ள காலம் என்று கூற வேண்டும். ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளின் உயர் பிரீமியங்களை ஷெல் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா திட்டம் குறித்து யோசிக்கலாம். உங்களின் அனைத்து கவலைகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் இந்த கொள்கை அமைந்துள்ளது. ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்க இந்தக் கொள்கையானது, எல்.ஐ.சி மற்றும் பிற காப்பீட்டு நிறுவனங்களுடன் நிர்வகிக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க காலம் தொடர்பான காப்பீட்டுக் கொள்கையாகும். ஆண்டுக்கு ரூ. 330 ப்ரீமியம் செலுத்தினால் ரூ. 2 லட்சம் வரை பெற தகுதி கொண்டதாக மாற்றுகிறது.

Advertisment

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா

உங்களின் வயது 18 முதல் 50 வரை இருக்கிறது என்றால், நீங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் இந்த திட்டத்தில் சேர தகுதியானவர். இந்த திட்டத்தை 1000க்கும் மேற்பட்ட வங்கிகள் வழங்குகின்றன என்பதால் இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்ட உங்கள் கணக்கிலிருந்து வருடாந்திர பிரீமியத்தை தானாக டெபிட் செய்வதற்கான ஒப்புதல் மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும்.

மே 31ம் தேதிக்குள் தானாக டெபிட் ஆகும் வசதியை நீங்கள் உங்களின் கணக்கில் செயல்படுத்திவிட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது பரிந்துரைக்கப்பட்ட படிவங்களை சமர்ப்பிப்பதற்கான நிலையான வருடாந்திர காலவரிசை ஆகும். பதிவுசெய்தல் செயல்முறையைப் பொருத்தவரை, விண்ணப்ப படிவத்தை உங்கள் வங்கியில் சமர்ப்பிக்கவும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் வங்கியைப் பொறுத்து எஸ்எம்எஸ் அடிப்படையிலான செயல்முறை மூலம் இந்தத் திட்டத்தில் நீங்கள் சேரலாம்.

Advertisment
Advertisements

உரிமைக் கோரலும் மிகவும் இலகுவாக நடைபெறும் செயல்முறையாக உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தொகையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.

இறந்த நபர் எந்த வங்கியில் பி.எம்.ஜெ.ஜே.பி.ஒய் திட்டத்தின் கீழ் இணைந்தாரோ அங்கே கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை சமர்பிக்கவும்.

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட உரிமைகோரல் படிவம்

டிஸ்சார்ஜ் ரசீது

சம்பந்தப்பட்ட நபரின் இறப்பு சான்றிதழ்

ரத்து செய்யப்பட்ட காசோலை / சம்பந்தப்பட்ட உறுப்பினரின் வங்கி விவரங்களின் நகல்

30 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனத்திற்கு இந்த உரிமைகோரல் படிவத்தை அனுப்ப வங்கி கடமைப்பட்டுள்ளது.

இதேபோல், காப்பீட்டு நிறுவனம் உரிமைகோரலை அங்கீகரிப்பதற்கும் வங்கியில் இருந்து உரிமைகோரல் கிடைத்ததிலிருந்து 30 நாட்களுக்குள் பணத்தை வழங்க வேண்டும்.

காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு தொகையை வழங்க அதிக காலம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இந்த திட்டத்தில் அந்த பிரச்சனை ஏதும் இல்லை.

ஜன்சுராக்ஷா போர்ட்டல் வழங்கிய தரவுகளின்படி, இந்த திட்டத்தில் இதுவரை 2020-21 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10.27 கோடி பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த பதிவுகளில், சுமார் 2,50,361 நபர்களிடம் இருந்து க்ளைம்கள் பெறப்பட்டு, அவற்றில் 2,34,905 க்ளைம்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. உண்மையில், இந்த திட்டத்திற்காக மொத்தம் 5.91 கோடி பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: