/indian-express-tamil/media/media_files/0Hfq6uitSaCyXbdyp17I.jpg)
வரும் தீபாவளிக்குள் தங்கம் விலை கிராம் ரூ.8 ஆயிரத்தை தொடும் என பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.
தங்கம் விலை அடுத்த 18 மாதங்களில் மிகப்பெரிய உயர்வை எட்டும் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.
இது குறித்து வலையொளிக்கு அவர் அளித்த பேட்டியில், “தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம். அடுத்த 18 மாதங்களில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்வை எட்ட வாய்ப்புள்ளது. தங்கம் கிராம் ரூ.8 ஆயிரம் வரை எட்டக் கூடும்” என்றார்.
மேலும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தங்கம் ஒரே மாதிரியான விலையில் விற்பனை செய்யும் நோக்கில் கொண்டுவரப்படும் திட்டத்தையும் ஆனந்த் சீனிவாசன் ஆதரித்தார்.
ஜூலை 20 அன்று, இந்தியாவில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.74,000-ஐ நெருங்கியது. இந்த விகிதம் தூய்மையான தங்கத்திற்கான பிரீமியத்தைக் குறிக்கிறது. 24 காரட் தங்கம் சனிக்கிழமையன்று 10 கிராமுக்கு ரூ.73,970 ஆக குறைந்தது. 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.68,800 ஆக இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.