axis bank netbanking : ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.5 கோடி வரை வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் 8.4% வட்டி வழங்கப்படுகிறது.
Advertisment
பங்குச் சந்தை முதலீடுகள், மியூச்சுவல் பண்டு போன்றவற்றை விட பாதுகாப்பானதக இருப்பது வங்கி வைத்து நிதி திட்டங்களில் பணத்தை சேமிப்பது. ஆக்சிஸ் வங்கியின் வைப்பு நிதி திட்டத்தைத் தொடங்கும்போது சிறப்பான வட்டி அளிக்கப்படுகிறது.
axis bank netbanking : எது சிறந்தது?
இந்திய குடிமக்கள், இந்து கூட்டுக் குடும்பம், கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவை ஆக்சிஸ் வங்கியில் வைப்பு நிதி கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ. 5000 முதல் வைப்பு நிதி கணக்கை ஆன்லைனில் இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் தொடங்கலாம். வங்கி கிளைக்குச் சென்று நேரடியாக வைப்பு நிதி கணக்கைத் தொடங்கும்போது குறைந்தபட்சம் ரூ.10,000 க்கு வைப்பு நிதி கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.
Advertisment
Advertisements
ஆக்சிஸ் இரண்டு விதமாக வைப்பு நிதி திட்ட முதலீட்டுக்கு வட்டியை வழங்குகிறது. 5 கோடிக்க உட்பட்ட வைப்பு நிதி கணக்குளுக்கு, முதலீடு செய்யும் காலத்தைப் பொறுத்து 3.5% முதல் 8.5% வரை வட்டி கிடைக்கும்.
தகுதி வாய்ந்த மூத்த குடிமக்களின் முதலீடுகளுக்கும் 8.4% வட்டி கிடைக்கும். ரூ. 2 கோடி முதல் ரூ. 4.92 கோடி வரை (ஒரு ஆண்டு, 5 நாட்கள் முதல் ஒரு ஆண்டு 11 நாட்கள் வரை) முதலீடு செய்யும்போதும் ரூ. 4.92 கோடியில் முதல் ரூ. 5 கோடி வரை (17 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை) முதலீடு செய்யும்போதும் 8.4% வட்டி பெறலாம்.
11 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை குறுகிய கால முதலீடாக ரூ. 5 கோடி வரை முதலீடு செய்தால் 7.5% வட்டி உண்டு. இதுவே முத்த குடிமக்களுக்கு என்றால் 7.75% வட்டி அளிக்கப்படும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”