bank holiday today : மாதம் 1 ஆம் தேதி வந்தவுடன் சேலரி அக்கவுண்டில் இந்த மாதத்திற்கான சம்பளம் எப்போது வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. இன்று மே 1 உழைப்பாளர் தினம் என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள்து.
பொதுவாக வங்கிகள் விடுமுறை எல்லா மாநிலங்களிலும் ஒன்றாக இருக்காது. மாநிலத்தின் விடுமுறைகளை பொருத்தும் மாறும்.இந்தாண்டும் மே 1 ஆம் தேதி ஆந்திரா, அசாம், பீகார், கோவா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா (மகாராஷ்டிரா தினம்), மணிப்பூர், புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் ஆன்லைன் ட்ரான்சேக்ஷன் வசதியும் இயங்காது என தெரிகிறது. இதனால் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இன்று சம்பளம் வருவது மிகவும் சிரமம் தான். இதைத்தவிர மேத மாதத்தில் மற்ற எந்தெந்த தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற தகவலை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
மே 9-ம் தேதி ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள் என்பதால் மேற்கு வங்கத்தில் வங்கிகள் விடுமுறை.மே 7-ம் தேதி கர்நாடவில் பசவ ஜெயந்தி என்பதால் வங்கிகள் விடுமுறை.மே 16-ம் தேதி சிக்கிம் தினம் என்பதால் அங்கு வங்கிகள் விடுமுறையாக இருக்கும். மே 18ம் தேதி புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பல்வேறு வடகிழக்கு மற்றும் வட இந்திய மாநிலங்களில் இயங்கும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வரும் 7ம் தேதி புகழ்பெற்ற வங்காளக் கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அன்று மேற்கு வங்காளம் மாநிலத்திற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் பரசுராம் ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு ஹிமாச்சல பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.