2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு, பிராந்திய மற்றும் தேசிய அடிப்படையில் சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஈத்-உல்-அதா (பக்ரீத்), ரத யாத்திரை, சான்ட் குரு கபீர் ஜெயந்தி போன்ற பல விடுமுறைகள் ஜூன் மாதத்தில் வருகின்றன. இவற்றில் சில தேசிய விடுமுறைகளாகவும், மற்றவை மாநில அளவிலான கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்பு நாட்களைப் பொறுத்து பிராந்திய விடுமுறைகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாராந்திர விடுமுறையாகும். மேலும், அனைத்து இந்திய வங்கிகளும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை பெறும். இந்தியாவின் விடுமுறைகள், உள்ளூர் மற்றும் பிராந்திய பழக்கவழக்கங்கள் காரணமாக மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடலாம்.
ஆகவே, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி நடவடிக்கைகளை அதற்கேற்ப திட்டமிட இந்த விடுமுறை நாட்களை அறிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும்.
ஜூன் மாதத்திற்கான மாநில வாரியான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:
ஜூன் 1 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை - இந்தியாவின் அனைத்து வங்கிகளும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருக்கும்.
ஜூன் 6 (வெள்ளி): கேரளாவில் வங்கிகள் ஜூன் 6 அன்று ஈத்-உல்-அதா (பக்ரீத்) பண்டிகையை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். 'தியாகப் பெருநாள்' என்றும் அழைக்கப்படும் பக்ரீத், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
ஜூன் 7 (சனி): குஜராத், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் கேரளா தவிர மற்ற மாநிலங்களில் உள்ள வங்கிகள் ஜூன் 7 அன்று பக்ரீத் (ஈத்-உஸ்-ஸுஹா) பண்டிகையை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும்.
ஜூன் 11 (புதன்): கபீர் தாஸின் பிறந்தநாள் ஆண்டு விழாவான சான்ட் குரு கபீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜூன் 11 அன்று சிக்கிம் மற்றும் மேகாலயாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூன் 12 (வியாழன்): குரு ஹர்கோபிந்த்ஜியின் பிறந்தநாள் ஜம்மு காஷ்மீரில் ஒரு பிராந்திய பொது விடுமுறை. அன்றைய தினம் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூன் 14 (சனி): 2025 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று பஹிலி ராஜா, ஒரு வங்கி விடுமுறையாக பஞ்சாப் மற்றும் ஒடிசாவில் கடைபிடிக்கப்படுகிறது. இது ஜூன் 15 அன்று மிசோரம் மாநிலத்தில் ஒய்.எம்.ஏ தினத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது.
ஜூன் 27 (வெள்ளி): நவடினா யாத்திரை என்று அழைக்கப்படும் ரத யாத்திரை பண்டிகையை முன்னிட்டு ஜூன் 27 அன்று ஒரிசா மற்றும் மணிப்பூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூன் 30 (திங்கள்): அமைதி தினம் என்று அழைக்கப்படும் ரம்னா நி தினத்தை முன்னிட்டு ஜூன் 30 அன்று மிசோரமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
வங்கி விடுமுறை நாட்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் இல்லாதபட்சத்தில், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது மொபைல் வங்கி சேவைகளை தொடர்ந்து பயன்படுத்தலாம். நிதித் தேவைகளுக்கு ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கலாம். மேலும், மொபைல் ஆப் மற்றும் யு.பி.ஐ சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.