இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (ஏப்.20) வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 5.70 புள்ளிகள் உயர்ந்து 17,624.45 எனவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 64.55 புள்ளிகள் உயர்ந்து 59,632.35 எனவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 115.50 புள்ளிகள் அல்லது 0.27% உயர்ந்து 42,269.50 ஆகவும், நிஃப்டி பார்மா 140.05 புள்ளிகள் அல்லது 1.11% சரிந்து 12,485.25 ஆகவும் இருந்தது.
NTPC, அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபுறம், டிவிஸ் லேப், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாக்டர் ரெட்டி, ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் ஹிண்டால்கோ ஆகியவை அதிக நஷ்டம் அடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“