இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் வாரத்தின் கடைசி வர்த்தக அமர்வை நஷ்டத்தில் முடித்தன.
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி-50 0.07% அல்லது 13.85 புள்ளிகள் சரிந்து 19,646.05 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 106.62 புள்ளிகள் அல்லது 0.16% சரிந்து 66,160.20 ஆகவும் முடிந்தது.
துறைசார் குறியீடுகளில், நிஃப்டி வங்கி 0.46%, நிஃப்டி ஆட்டோ 0.22%, நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ் 0.41%, நிஃப்டி ஐடி 0.86%, நிஃப்டி பிரைவேட் வங்கி 0.33% சரிந்து காணப்பட்டது.
எனினும், நிஃப்டி மெட்டல் 0.90% உயர்ந்தது. அதேபோல், நிஃப்டி எஃப்எம்சிஜி 0.88%, நிஃப்டி மீடியா 1.38% உயர்ந்தது, நிஃப்டி பிஎஸ்யு வங்கி 0.30%, நிஃப்டி பிஹார்மா 0.30% உயர்ந்தது.
தொடர்ந்து, நிஃப்டி ஆயில் & கேஸ் 0.32% மற்றும் நிஃப்டி ரியாலிட்டி 1.83% உயர்ந்து காணப்பட்டது. நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களின் பட்டியலில் என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இடம் பிடித்தன.
மறுபுறம், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“