வாரத்தின் இறுதி வர்த்தகம்; ஷாக் கொடுத்த பங்குச்சந்தை: தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்!

இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் நிறைவு நாள் வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன.

இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் நிறைவு நாள் வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிந்து காணப்பட்டன.

இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் வாரத்தின் கடைசி வர்த்தக அமர்வை நஷ்டத்தில் முடித்தன.
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி-50 0.07% அல்லது 13.85 புள்ளிகள் சரிந்து 19,646.05 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 106.62 புள்ளிகள் அல்லது 0.16% சரிந்து 66,160.20 ஆகவும் முடிந்தது.

Advertisment

துறைசார் குறியீடுகளில், நிஃப்டி வங்கி 0.46%, நிஃப்டி ஆட்டோ 0.22%, நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ் 0.41%, நிஃப்டி ஐடி 0.86%, நிஃப்டி பிரைவேட் வங்கி 0.33% சரிந்து காணப்பட்டது.
எனினும், நிஃப்டி மெட்டல் 0.90% உயர்ந்தது. அதேபோல், நிஃப்டி எஃப்எம்சிஜி 0.88%, நிஃப்டி மீடியா 1.38% உயர்ந்தது, நிஃப்டி பிஎஸ்யு வங்கி 0.30%, நிஃப்டி பிஹார்மா 0.30% உயர்ந்தது.

தொடர்ந்து, நிஃப்டி ஆயில் & கேஸ் 0.32% மற்றும் நிஃப்டி ரியாலிட்டி 1.83% உயர்ந்து காணப்பட்டது. நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களின் பட்டியலில் என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இடம் பிடித்தன.
மறுபுறம், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் நஷ்டமடைந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nifty Stock Market Bombay Stock Exchange Sensex

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: