பாங்க் ஆஃப் பரோடா (BOB) நிலையான வைப்புத் தேர்வுகளை வழங்குகிறது, மேலும் அவற்றின் வட்டி விகிதங்கள் தற்போது திருத்தப்பட்டுள்ளன.
பாங்க் ஆஃப் பரோடா, பல்வேறு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான (எஃப்டி) வட்டி விகிதங்களை அக்டோபர் 9 முதல் உடனடியாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதங்கள் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பலன்களை வழங்கும்.
மேலும், இந்த வைப்புக்கள் பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் அவை உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன.
இதுமட்டுமின்றி பணத்தைச் சேமிப்பது மற்றும் உங்கள் சேமிப்பில் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் ஈட்டும்போது, பல இந்தியர்களிடையே நிலையான வைப்புத்தொகை (FDகள்) ஒரு பிரபலமான தேர்வாகும்.
புதிய வட்டி விகிதங்கள்
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு, பொது வாடிக்கையாளர்களுக்கு 3.00% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 3.50% வட்டி விகிதம் வழங்குகிறது.
15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு, பொது வாடிக்கையாளர்களுக்கு 3.50% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 4.00% விகிதம் ஆகும்.
தெடர்ந்து, நீண்ட காலத்திற்கு, வட்டி விகிதங்கள் படிப்படியாக அதிகரிக்கும். அதிகபட்ச விகிதம் 7.50% 5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரை திட்டம் கிடைக்கிறது.
சிறப்பு டெபாசிட் திட்டங்கள்
"பரோடா திரங்கா பிளஸ் டெபாசிட் திட்டம்" போன்ற தனித்துவமான வைப்புத் திட்டங்களையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 399 நாட்கள் வைப்புத் தொகைக்கு, பொது வாடிக்கையாளர்களுக்கு 7.15% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.65% வட்டி விகிதம் கிடைக்கும். இதிலும் மூத்தக் குடிமக்களுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“