baroda connect: ஆன்லைனில் பணம் அனுப்ப மூன்று முறைகள் உள்ளன. ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறைகளில் பணம் அனுப்பும் வாய்ப்பை அன்னைத்து வங்கிகளும் வழங்குகின்றன.
இந்த சேவைகளுக்கு வங்கிகள் 50 ரூபாய் வரை சேவை கட்டணமாக வசூலிக்கின்றன. இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம். அந்த வகையில் ஆன்லைன் பரிவர்த்தணைக்கு பாங்க் ஆப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் கட்டண தொகையை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
baroda connect: பேங்க் ஆஃப் பரோடா:
ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான பண பரிவர்த்தனைகளுக்கு 15 ரூபாயும், 2 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 25 ரூபாய் வசூலிக்கிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. 2 - 5 லட்சம் வரை காலை 8 மணி முதல் 11 மணி வரை பணம் அனுப்ப, ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைக்கு 25 + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது. காலை 11 மணி முதல் 1 மணி வரை 27 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு மணிக்கு மேல் 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதைத்தவிர எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் பணவரித்தனை குறித்த சில தகவல்களை தெரிந்துக் கொள்ளவும் இங்கே விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.
எச்டிஎப்சி ஆன்லைன் பரிவர்த்தனைகள்:
ஆன்லைனில் நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைகளுக்கு எச்டிஎப்சி எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.
எச்டிஎப்சி வங்கிக் கிளையில் பரிவர்த்தனைக்கு:
10,000 வரையிலான நெஃப்ட் பரிவர்த்தனைக்கு 2.5+ ஜி.எஸ்.டி, அதற்கு மேல் ஒரு லட்சம் ரூபாய் வரை 5 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
2-5 லட்சம் வரையிலான, ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது. 5 லட்சத்துக்கு மேல் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
எச்டிஎப்சி ஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனை:
ஒரு லட்சம் வரையிலான பரிவர்தனைக்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டி. 1-2 லட்சம் வரை 15 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது.
இஎம்ஐ கட்டும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!