பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 399 ரீசார்ஜ் திட்டத்தில் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் காலிங் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்னர் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல, டெலிகாம் சந்தையில் தொடர்ந்து பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தனர், இந்த போட்டியை சமாளிக்க மற்ற நிறுவனங்களும் ஜியோவைப் போலவே கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.
ஜியோவைப் போலவே, குறைந்த விலையில் அதிக டேட்டா, கேஸ்பேக் ஆஃபர்கள், ரீசார்ஜ் கூப்பன்கள் என அனைத்து வித்யாசமான அறிவிப்புகளையும் ஏர்டெல், வோடஃபோன் போன்ற மற்ற நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்த போட்டி களத்தில் புதியதாக பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைந்துள்ளது.
டெலிகாம் சந்தையில், புதியதொரு புரட்சி செய்ய ஆயுத்தமாகி வரும் இந்நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் பிரீப்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமடெட் காலிங் மற்றும் டேட்டா வசதியை அறிவித்திருந்தது. இந்த ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது மற்றொரு அறிவிப்பாக ரூ. 399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுக்குறித்து அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்டாவா பதிவிட்டுள்ள ட்விட்டில்
,
#TalkToBSNLCMD We are soon launching a plan in postpaid with unlimited calling @ Rs. 399. https://t.co/FkayxaRXPG
— P.K. Purwar (@CMDBSNL) February 22, 2018
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 399 ரீசார்ஜ் திட்டம் நேரடியாக ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் களத்தில் இறங்கவுள்ளது. ரூ 399 ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அளவில்லாத காலிங் வசதி, 20 ஜிபி டேட்டா, விங்க் மியூஸிகின் இலவச சந்தா சேவையை வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் ஜியோவின் ரூ. 409 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 20 ஜிபி டெட்டா மற்றும் அளவில்லா உள்ளுர், வெளியூர் அழைப்புகள், 100 இலவச குறுங்செய்திகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.