/tamil-ie/media/media_files/uploads/2017/09/bsnl-offers.jpg)
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ 448 ரீசார்ஜ் திட்டத்தில், அன்லிமிடட் வாய்ஸ் காலிங் மற்றும் நாள் ஒன்றுக்கும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்னர் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல, டெலிகாம் சந்தையில் தொடர்ந்து பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தனர், இந்த போட்டியை சமாளிக்க மற்ற நிறுவனங்களும் ஜியோவைப் போலவே கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.
ஜியோவைப் போலவே, குறைந்த விலையில் அதிக டேட்டா, கேஸ்பேக் ஆஃபர்கள், ரீசார்ஜ் கூப்பன்கள் என அனைத்து வித்யாசமான அறிவிப்புகளையும் ஏர்டெல், வோடஃபோன் போன்ற மற்ற நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்த போட்டி களத்தில் புதியதாக பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைந்துள்ளது.
டெலிகாம் சந்தையில், புதியதொரு புரட்சி செய்ய ஆயுத்தமாகி வரும் இந்நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் பிரீப்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமடெட் காலிங் மற்றும் டேட்டா வசதியை அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது, ரூ. 448 பிரீப்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, ரூ. 448 க்கு ரீசார்ஜ் செய்தால், 84 நாட்களுக்கு செயல்படும், அன்லிமிடட் காலிங் வசதி, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, மற்றும் நாள் ஒன்றுக்கு 100 குறுங்செய்திகள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லின் இந்த ரீசார்ஜ் திட்டம் டெலிகாம் சந்தையில், ஜியோவின் ரூ. 448 ரீசார்ஜ் திட்டத்திற்கு போட்டியாக களம் இறங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us