இந்திய முதலீட்டாளர்கள் பெரும்பாலும் எஃப்டியில் முதலீடு செய்வதுதான் சேமிப்புக்கு பாதுகாப்பான தேர்வாக கருதுகின்றனர்.
காரணம் எஃப்டியில் இல் முதலீடு செய்வது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது.
அந்த வகையில், 3 வருட எஃப்டி முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதற்கிடையில், பல்வேறு வங்கிகள் 3 வருட எஃப்டிக்கு பம்பர் வட்டியை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.
இதில் அதிகபட்சமாக 8.60% வரை வட்டி அளிக்கும் 5 வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
எஸ்.பி.எம் வங்கி
எஸ்பிஎம் வங்கி அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 3 வருட எஃப்டிக்கு அதிகபட்சமாக 8.10% வட்டி அளிக்கிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கு 8.60% வரை வட்டி வழங்குகிறது.
டிசிபி வங்கி
டிசிபி வங்கி அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 3 வருட எஃப்டிக்கு அதிகபட்சமாக 8% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 8.50% வட்டியும் வழங்குகிறது.
யெஸ் வங்கி
யெஸ் வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு 3 வருட எஃப்டிக்கு 7.75% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 8.25% வட்டியும் வழங்குகிறது.
டொய்ச்சு வங்கி (Deutsche Bank)
டொய்ச்சு வங்கி (Deutsche Bank) அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 3 வருட எஃப்டிக்கு 7.75% வட்டியை வழங்குகிறது, அதே சமயம், அதன் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியையும் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“