scorecardresearch

எகிறும் விமான டிக்கெட் விலை: சென்னை- துபாய் கட்டணம் இவ்வளவா?

Air fare from Chennai to Dubai, Doha and other destinations in the Middle East has zoomed due to fewer direct flights and higher demand from transit passengers Tamil News: வளைகுடா நாடுகளில் உள்ள விமான நிலையங்கள், சென்னையில் இருந்து இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு பயணிகள் செல்வதற்கு பிரபலமான மற்றும் வசதியான போக்குவரத்து மையங்களாக உள்ளன.

Chennai to Gulf countries Flight tickets to become costlier Tamil News
Chennai to Dubai Air fare to become costlier Tamil News

Chennai  – Doha Air ticket price become costlier Tamil News: இந்தியாவில் உள்நாட்டு விமான கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், நாட்டில் இருந்து வளைகுடா நாடுகளான துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டின் விலை அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து துபாய், தோகா உள்ளிட்ட நாடுகளுக்கு குறைவான நேரடி விமானங்கள் மற்றும் போக்குவரத்துப் பயணிகளின் அதிக தேவை காரணமாக டிக்கெட் விலை உயர்த்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

வளைகுடா நாடுகளில் உள்ள விமான நிலையங்கள், சென்னையில் இருந்து இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு பயணிகள் செல்வதற்கு பிரபலமான மற்றும் வசதியான போக்குவரத்து மையங்களாக உள்ளன. ஆனால், அங்கு செல்வதற்கான விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதனால், அந்த நாடுகளில் இருந்து திரும்பும் கட்டணம் அடுத்த மாதம் முதல் அதிகபட்ச வரம்பான ரூ.40,000 முதல் ₹1 லட்சம் வரை உயர்த்தப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான விமானங்கள் வெளிநாட்டு விமான நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்களின் இரண்டு கேரியர்கள் மட்டுமே உள்ளன. வெளிநாட்டு கேரியர்களும் சிறந்த அதிர்வெண்ணைக் கொண்டுள்ளன. மேலும், சென்னையில் இருந்து துபாய்க்கு நேரடியாகச் செல்லும் ஏழு விமானங்களில், இரண்டு விமானங்கள் மட்டுமே பெரும்பாலான நாட்களில் இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.

“வளைகுடா நாடுகளின் விமான நிறுவனங்கள் தங்கள் மையங்களில் இருந்து இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இணைக்கும் விமானங்களைக் கொண்டிருப்பதால் அதிக விமானங்களை இயக்குவதன் மூலம் லாபம் ஈட்டுகிறது. நமது கேரியர்களுக்கு ஒரு பாதகம் உள்ளது, ஏனெனில் அவைகளால் அந்த விமான நிலையங்கள் வரை மட்டுமே பறக்க முடியும். துபாய் அல்லது தோகாவிற்கு அப்பால் இல்லை. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிற்கு நீண்ட தூர விமானங்களை இயக்க ஏர் இந்தியாவிடம் மட்டுமே விமானம் உள்ளது. கட்டணங்கள் குறைய ஏர் இந்தியா தனது திறனை அதிகரிக்க மக்கள் காத்திருக்க வேண்டும்.

ஓபன் ஸ்கை கொள்கை போட்டியை அதிகரிக்கும் மற்றும் கட்டணத்தை குறைக்கும் என்று அரசாங்கம் நினைத்தது, ஆனால் இந்திய கேரியர்களின் குறைந்த திறன் காரணமாக அதற்கு நேர்மாறாக உள்ளது. மற்றும் விமான நிறுவனங்கள் கார்டெல்களைப் போல நடந்துகொண்டு அதிக கட்டணத்தை நிர்ணயித்து வருகின்றன” என்று ஓய்வுபெற்ற ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“விமான பெட்ரோல் விலையின் தாக்கத்தால் பெரும்பாலான வழித்தடங்களில் கட்டணம் அதிகமாக உள்ளது. பொழுது போக்குப் பயணிகள் அதிகம் இல்லை, ஆனால் போக்குவரத்துப் பயணிகளின் தேவை சென்னையில் இருந்து அதிகம். துபாய், தோகா மற்றும் பிற விமான நிலையங்கள் வழியாக ஐரோப்பா மற்றும் இங்கிலாந்துக்கு மாணவர்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளது. விமானக் கட்டணம் அதிகமாக இருப்பதால் டிராவல் மற்றும் டூர் ஆபரேட்டர்களும் சிரமப்படுகின்றனர்.” என்று சென்னையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Chennai to gulf countries flight tickets to become costlier tamil news

Best of Express