கோரோனா இந்தியாவின் எதிர்காலத்தில் பிசாசு போல தொங்குகிறது; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
நாடு தழுவிய ஊரடங்கும் உலகளாவிய பொருளாதார மந்தநிலையும் பொருளாதார நடவடிக்கைகளை மோசமாக பாதித்து வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்க கணிப்புகளைச் சுற்றியுள்ள அபாயங்கள் இந்த கட்டத்தில் சமநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது, ஆனால், கோவிட்-19 எதிர்காலத்தில் ஒரு பிசாசு போல தொங்குகிறது என்று கவலை தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய ஊரடங்கும் உலகளாவிய பொருளாதார மந்தநிலையும் பொருளாதார நடவடிக்கைகளை மோசமாக பாதித்து வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்க கணிப்புகளைச் சுற்றியுள்ள அபாயங்கள் இந்த கட்டத்தில் சமநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது, ஆனால், கோவிட்-19 எதிர்காலத்தில் ஒரு பிசாசு போல தொங்குகிறது என்று கவலை தெரிவித்துள்ளது.
rbi monetary policy report, rbi global economy, ரிசர்வ் வங்கி, கொரோனா வைரஸ், coronavirus effect on economy,COVID-19 pandemic, coronavirus, lock down, tamil indian express news
நாடு தழுவிய ஊரடங்கும் உலகளாவிய பொருளாதார மந்தநிலையும் பொருளாதார நடவடிக்கைகளை மோசமாக பாதித்து வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்க கணிப்புகளைச் சுற்றியுள்ள அபாயங்கள் இந்த கட்டத்தில் சமநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது, ஆனால், கோவிட்-19 எதிர்காலத்தில் ஒரு பிசாசு போல தொங்குகிறது என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
Advertisment
ரிசர்வ் வங்கி தனது பணக் கொள்கை அறிக்கையில், வளர்ச்சி தொடர்பான பார்வையில், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கும் உலகளாவிய பார்வையில் எதிர்பார்க்கப்படும் சுருக்கமும் பெரிதும் சுமையாக இருக்கும் என்பதை கணித்துள்ளன. உண்மையான மூலதன உற்பத்தி மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்கு திரும்புவதும் வைரஸ் பரவலின் வேகத்தைப் பொருத்துள்ளது என்று கூறியுள்ளது.
நாடு தழுவிய முடக்கம் காரணமாகவும், உலகளாவிய வர்த்தகம் மற்றும் வளர்ச்சியின் மூலம் செயல்படும் இரண்டாவது சுற்று விளைவுகள் மூலமாகவும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகளை நேரடியாக பாதிக்கும் என்று சென்ட்ரல் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய நாணய மற்றும் நிதி நடவடிக்கைகள் கொரோனாவின் தாக்கத்தை குறைக்கும் என்றும் இயல்புநிலை திரும்பியதும் உள்நாட்டு தேவை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று செண்ட்ரல் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
மேலும், இந்த அறிக்கை, பணவீக்கத்தில் கோவிட்-19-யின் தாக்கம் தெளிவற்று இருப்பதாகவும், விநியோக இடையூறுகள் காரணமாக உணவு அல்லாத பொருட்களின் விலையில் செலவு-உந்துதல் அதிகரிப்பால் உணவு விலைகளில் சரிவு ஏற்படக்கூடும் என்றும் கூறியுள்ளது.
வைரஸ் பரவலுக்கு முன்னர், 2020-21 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சிக்கான பார்வை காணப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் பம்பர் ரபி அறுவடை மற்றும் அதிக உணவு விலைகள் கிராமப்புற தேவையை வலுப்படுத்துவதற்கு உகந்த நிலைமைகளை வழங்கியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கொள்கை விகிதத்தில் கடந்த காலக் குறைப்புகளை வங்கி கடன் விகிதங்களுக்கு அனுப்புவது மேம்பட்டு வருகிறது, மேலும் வரி விகிதங்களில் குறைப்பு மற்றும் கிராமப்புற மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் உள்நாட்டு தேவையை பொதுவாக உயர்த்துவதில் செயல்படுத்தப்பட்டன.
கோவிட்-19 தொற்று நோய் இந்த பார்வையை வெகுவாக மாற்றியுள்ளது" என்று செண்ட்ரல் வங்கி அறிக்கை கூறியுள்ளது. கோவிட்-19க்கு பிந்தைய கணிப்புகள் குறிப்பிடுவதைப் போல, உலக பொருளாதாரம் இந்த ஆண்டு மந்தநிலையில் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைப்பு பெரிய அளவில் நீடித்தால், நாட்டின் வர்த்தக விதிமுறைகளை மேம்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், இந்த வழியின் ஆதாயம் பணிநிறுத்தம் மற்றும் வெளிப்புற தேவை இழப்பு ஆகியவற்றிலிருந்து இழப்பை ஈடுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
இந்த அறிக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்தவொரு வளர்ச்சி முன்னறிவிப்பையும் வழங்கவில்லை. நிலைமை மிகவும் நீர்த்து உள்ளதால் தரவுகள் தினசரி அடிப்படையில் வளர்ச்சிக்கான பார்வையில் மாற்றங்களை உருவாக்குகிறது என்று குறிப்பிடுகிறது.
உலகளாவிய உற்பத்தி, விநியோகச் சங்கிலிகள், வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் பாரிய இடப்பெயர்வுகளுடன், COVID-19 தொற்றுநோயால் உலகளாவிய பொருளாதார பொருளாதாப் பார்வை மங்கலாக காணப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள நிதிச் சந்தைகள் தீவிர ஏற்ற இறக்கத்தை கண்டு வருகின்றன; உலகளாவிய பொருட்களின் விலை, குறிப்பாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"