47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது சாதாரண மக்களை அதிகம் பாதிக்கும். இந்நிலையில் இன்று முதல் மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விதிகள் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் பின்வரும் விஷங்களுக்கு ஜிஎஸ்டி விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு கூடுதல் ஷாக்
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு அறையின் வாடகைக்கு விதிக்கப்பட்ட வரி அதிகமாகி உள்ளது. இந்நிலையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் அறையின் வாடகை ரூ.5000-க்கு அதிகமாக இருந்தால், 5 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் அனுமதிக்கப்படும் அறையின் வாடகையும் அதிகமாகும்.
பென்சில் ஷார்ப்னர் முதல் கத்தி வரை
நறுக்க பயன்படுத்தும் கத்திகள், கரண்டிகள், நூடுல்ஸ் சாப்பிட பயன்படுத்தும் ஃபோர்க், ஸ்கிமர், ஆகிய பொருட்களின் ஜிஎஸ்டி வரி 12 % இருந்து 18 % உயர்ந்துள்ளது.
பால் முதல் தயிர்வரை
தயிர், மோர், லெஸ்லி, பால் ஆகியவை பேக் செய்யப்பட்டிருந்தால், அதற்கு 5 % வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இதற்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்பது குறிப்பிடதக்கது.
வங்கி காசோலை
காசோலை மற்றும் வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 % ஜிஎஸ்டி வரி இன்று முதல் வசூலிக்கப்பட உள்ளது.
ஹோட்டல் வாடகை
நீங்கள் தங்கும் ஓட்டலின் அறை வாடகை ரூ.1000 க்கும் குறைவாக இருந்தால் முன்பு 12 % வரி வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் அது 18% ஆக உயர்ந்துள்ளது.
எல்இடி விளக்குகள்
எல்இடி விளக்குள் மற்றும் விளக்கு தொடர்பான பொருட்களின் ஜிஎஸ்டி வரி 12 % இருந்து 18% ஆக உயர்ந்துள்ளது.
விலை குறையும் பொருட்கள்
உடலில் பொருத்தப்படும் செயற்கை பாகங்கள், எலும்பு முறிந்தால் பயன்படும் பொருட்கள், லென்ஸ், ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி 12% இருந்து 5% ஆக குறைந்துள்ளது.