என்.பி.எஸ் Vs பி.பி.எஃப்: உங்கள் ஓய்வூதியத்திற்கு ஏற்ற சரியான முதலீடு எது?

என்.பி.எஸ் மற்றும் பி.பி.எஃப் ஆகிய இரண்டு திட்டங்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இது முதலீடு செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

என்.பி.எஸ் மற்றும் பி.பி.எஃப் ஆகிய இரண்டு திட்டங்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இது முதலீடு செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Investment

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பொருளாதார ரீதியாக மற்றவர்களை சார்ந்து இருக்கக் கூடாது என்ற நோக்கத்திற்காக தான் கடினமாக உழைத்து பணம் ஈட்டுகிறோம். அந்த வகையில் அனைவருக்குமே ஓய்வூதியம் என்பது அவசியமாகும். 

Advertisment

இதில், நேஷனல் பென்ஷன் ஸ்கீமை (என்.பி.எஸ்) தேர்வு செய்யலாமா அல்லது பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் ஸ்கீமை (பி.பி.எஃப்) தேர்வு செய்யலாமா என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகள் குறித்து பாஸ்வாலா யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை இப்பதிவில் காணலாம்.

என்.பி.எஸ் திட்டத்தில் வருமானம் என்பது சந்தையுடன் தொடர்புடையது. ஆனால், பி.பி.எஃப் திட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, என்.பி.எஸ் திட்டத்தில் சற்று அபாயம் இருக்கலாம். பி.பி.எஃப் திட்டம் முற்றிலும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

60 வயது வரை என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். எனினும், பி.பி.எஃப் திட்டத்திற்கு 15 ஆண்டுகள் முதிர்வு காலம். 18 வயது முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் என்.பி.எஸ் கணக்கு தொடங்கலாம். பி.பி.எஃப் கணக்கை தொடங்க வயது வரம்பு கிடையாது. இந்தியர்கள் யாராக இருந்தாலும் இந்தக் கணக்கை தொடங்கலாம்.

Advertisment
Advertisements

ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 1000 என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். பி.பி.எஃப் திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 500 -ல் இருந்து முதலீடு செய்யலாம். இது தவிர ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெறும் நபர்களுக்கு என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்ய அதிகபட்ச உச்சவரம்பு கிடையாது. எனினும், பி.பி.எஃப் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை மட்டுமே அதிகபட்சமாக முதலீடு செய்ய முடியும்.

முதிர்வு காலத்திற்கு முன்னரே பணத்தை எடுக்க வேண்டுமானால், சில காரணங்களின் அடிப்படையில் அதற்கு என்.பி.எஸ் திட்டத்தில் அனுமதி அளிக்கப்படும். மேலும், பி.பி.எஃப் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கிய 5 ஆண்டுகளுக்கு பின்னர் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். 

இந்த அளவுகோல் அடிப்படையில் உங்களுடைய நிதி தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ற திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்த லாபத்தை வழங்கும்.

Ppf

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: