ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புத்தம் புதிய ஆஃபரை அறிவித்துள்லது. தீபாவளி தினத்தையொட்டி அறிவித்திருக்கும் இந்த ஆஃபர் மக்களை கண்டிப்பாக கவரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
ஜியோ ரீசார்ஜ்:
டெலிகாம் மார்க்கெட்டில் ஜியோ – எர்டெல் நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. போட்டி முனைப்பில் இரண்டு நிறுவனங்களும் புதிய புதிய சலுகைகளை அறிவித்து வருவது வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.
ரீசார்ஜ் திட்டங்களில் கூட புதிய புதிய மாற்றங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர பல்வேறு முயற்சிகளை இரண்டு நிறுவனங்களும் எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஜியோ நிறுவனம், தீபாவளியை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது
ஜியோவின் ரூ.1,699 ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 547.5 ஜி.பி. வழங்கப்படுகிறது. இதில் யூசர்கள் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை ஏற்கனவே சந்தையில் செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யூசர்களுக்கு 100% கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.
முன்னதாக இந்த கேஷ்பேக் சலுகை ரூ.149, ரூ.198, ரூ.299, ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.448, ரூ.498, ரூ.509, ரூ.799, ரூ.999, ரூ.1,699, ரூ.1,999, ரூ.4,999 மற்றும் ரூ.9,999 சலுகைகளில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேஷ்பேக் தொகையை கூப்பன் வடிவில் மைஜியோ செயலியில் சேர்க்கப்படும். நீங்கள் எப்போது வேண்டுமானலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜியோ வழங்கும் வவுச்சர்களின் வேலிடிட்டி டிசம்பர் 31, 2018 வரை செல்லுபடியாகும் மேலும் இந்த கேஷ்பேக் சலுகை நவம்பர் மாதம் 30ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
ஜியோவின் ரூ.1,699 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். சேவைகளை யூசர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டம் மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.