சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் சென்னையில் 4.67 ஏக்கர் நிலத்தை டி.எல்.எஃப் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து ரூ.735 கோடிக்கு வாங்கி உள்ளது.
சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட ஒழுங்குமுறைத் தாக்கல் ஒன்றில், சென்னை கிண்டியில் உள்ள 4.67 ஏக்கர் நிலத்தை டிஎல்எப் ஐடி ஆபீஸ் சென்னை பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளது.
இதன் விற்பனை மதிப்பு ரூ.735 கோடி எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டி.எல்.எஃப் (DLF) நிறுவனம் சென்னை சந்தையில் நல்ல இருப்பைக் கொண்டுள்ளது. இது, நகரத்தில் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களை உருவாக்கி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“