கிசான் விகாஸ் பத்ரா நீண்ட கால முதலீடுகளுக்குக் கருத்தில் கொள்ளப்படும் சிறு சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும்.
தற்போதுள்ள வட்டி விகிதத்தின்படி இந்தத் திட்டம் 117 மாதங்களில் இரட்டிப்பு வருமானத்தை அளிக்கும். இந்தத் திட்டத்தை ஆன்லைனில் தொடங்குவது, வேறு நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆன்லைனில் கிஷான் விகாஸ் பத்ரா
1) DOP இணைய வங்கியில் உள்நுழையவும்.
2) ‘General Services' >'Service Requests' > 'New Requests செல்லவும்
3) என்எஸ்சி கணக்கை கிளிக் செய்யவும்
4) என்.எஸ்.சி திறக்கப்பட வேண்டிய தொகை குறைந்தபட்சம் ரூ 1000 ஆகும். (அதிகப்பட்சம் 100ன் மடங்கு)
5) டெபிட் கணக்கு இணைக்கப்பட்ட போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்
6) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்கவும்.
7) ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்
8) பரிவர்த்தனை கடவுச்சொல்லை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
முதிர்வு தொகை பெறுவது எப்படி?
கணக்கு வைத்திருப்பவர் படிவம்-2 (Form-2) விண்ணப்பத்தை கணக்கு அலுவலகத்தில் சமர்ப்பித்தால், முதிர்வுத் தொகை அவர்களுக்கு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் முதிர்வு காலம், கணக்கு தொடங்கும் போது நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதத்தால் தீர்மானிக்கப்படும்.
பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இதர திட்டங்களுடன் ஒப்பிடுகையில் அஞ்சல சிறு சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
இந்தத் திட்டங்கள் உறுதியளிக்கப்பட்ட வருமானத்தை அளிப்பதால் பலதரப்பட்ட முதலீட்டாளர்களும் இதில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“