Advertisment

ரூ.250 முதல் முதலீடு.. 8.2 சதவீதம் வட்டி: இந்தத் திட்டம் தெரியுமா?

மத்திய மோடி அரசு 2014ஆம் ஆண்டு சுகன்யா சம்மிரிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் நோக்கம் பெண் குழந்தைகள் மேம்பாடு ஆகும்.

author-image
WebDesk
New Update
Sukanya Samriddhi Yojana 2019

சுகன்யா சம்மிரிதி யோஜனாவில் 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய மோடி அரசு 2014 ஆம் ஆண்டு சுகன்யா சம்ரித்தி யோஜனாவைத் தொடங்கியது. குறிப்பாக பெண்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், 10 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி கணக்கைத் திறந்து, ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்து பெரும் வருமானத்தைப் பெறலாம்.

Advertisment

மகளின் பெயரில் நடத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், பெண் 18 வயதைத் தாண்டிய பிறகு டெபாசிட் தொகையில் 50 சதவீதம் வரை எடுக்கலாம். 21 வயதில் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் மகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள். இந்த திட்டத்தின் கீழ், டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 8.2 சதவீத வட்டி விகிதத்தை அரசாங்கம் தற்போது வழங்குகிறது.

மகளிர் சேமிப்பு சான்றிதழ்

இந்தத் திட்டத்தில் எந்த வயதினரும் பெண்கள் முதலீடு செய்யலாம் மற்றும் அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ 2 லட்சம் ஆகும். 2 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் 7.50 சதவீத நிலையான வட்டி விகிதத்தின் பலனைப் பெறலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ், வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ரூ.1.50 லட்சம் தள்ளுபடி கிடைக்கும். 2023 டிசம்பரில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், முதிர்வின்போது ரூ.2,32,044 லட்சத்தைப் பெறுவீர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Sukanya Samriddhi Yojana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment