/indian-express-tamil/media/media_files/ZNyOH8xmmwpFFUR8KgHw.jpg)
வரி செலுத்துவோர் இந்த பட்ஜெட்டில் தனிநபர்களுக்கான வரி நிவாரணத்தை எதிர்பார்க்கின்றனர்.
சேமிப்புக் கணக்குகள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்தின் மீதான வரி விலக்கு வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்தும் திட்டம் குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், வங்கிகள் இந்த கோரிக்கையை முன்மொழிந்துள்ளன. இது நிறைவேற்றப்பட்டால், டெபாசிட்களை உயர்த்துவதற்கு ஊக்கத்தொகையைக் கோரிய கடன் வழங்குபவர்களுக்கு இது ஓரளவு நிவாரணம் அளிக்கும்.
இந்த முன்மொழிவுக்கான இறுதி முடிவு இன்னும் நிலுவையில் உள்ளது. தற்போதைய வரி ஆட்சியின் கீழ், சேமிப்புக் கணக்குகளில் இருந்து ஆண்டுக்கு ரூ. 10,000 வரையிலான வட்டி வருமானம் வருமான வரிச் சட்டத்தின் 80TTA பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, இந்த வரம்பு ரூ. 50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிவு 80TTB இன் கீழ் நிலையான வைப்புகளிலிருந்து வரும் வட்டி வருமானத்தையும் இது உள்ளடக்கியது.
இதற்கிடையில், வரி செலுத்துவோர் இந்த பட்ஜெட்டில் தனிநபர்களுக்கான வரி நிவாரணத்தையும் எதிர்நோக்குகின்றனர். இதில், புதிய வரி விதிப்பின் கீழ் விலக்கு வரம்பை தற்போது ஆண்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதும் அடங்கும்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) அளவுகோல்களுடன் வரி கட்டமைப்பை சீரமைத்து, ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வரையிலான வருமானத்தின் மீதான வரிப் பொறுப்பு பூஜ்ஜியமாக கருதப்படுவதும் மற்றொரு விருப்பம் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.