மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் ரூ.3.5 கோடி கிடைக்கும்! இ.பி.எஃப்.பின் இந்த திட்டத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

EPF-ல் மாதம் ரூ. 5,000 முதலீடு செய்தால், சம்பள உயர்வு, 8.25% வருடாந்திர வட்டியுடன் சேர்த்து, ஓய்வுபெறும் வயதில் உங்கள் சேமிப்பு சுமார் ரூ. 3.5 கோடியாக உயரும். அரசு உத்தரவாதத்துடன் கூடிய இந்தத் திட்டம், ஓய்வுக்காலத்தில் பென்ஷன் வசதியையும் உறுதி செய்கிறது.

EPF-ல் மாதம் ரூ. 5,000 முதலீடு செய்தால், சம்பள உயர்வு, 8.25% வருடாந்திர வட்டியுடன் சேர்த்து, ஓய்வுபெறும் வயதில் உங்கள் சேமிப்பு சுமார் ரூ. 3.5 கோடியாக உயரும். அரசு உத்தரவாதத்துடன் கூடிய இந்தத் திட்டம், ஓய்வுக்காலத்தில் பென்ஷன் வசதியையும் உறுதி செய்கிறது.

author-image
WebDesk
New Update
EPF calculator

இ.பி.எஃப்.பில் செய்யப்படும் சிறிய மற்றும் சரியான முதலீடு, ஓய்வூதிய காலத்தில் பெரிய தொகையை உருவாக்கும் ஆற்றல் கொண்டது. மாதம் வெறும் ரூ.5000 முதலீடு செய்தால், உங்கள் சம்பள உயர்வு மற்றும் 8.25% வருடாந்திர வட்டியுடன் சேர்த்து, ஓய்வுபெறும் வயதில் உங்கள் இ.பி.எஃப் சேமிப்பு மட்டும் சுமார் ரூ.3.5 கோடியாக உயரும். அரசின் முழுமையான உத்தரவாதத்துடன் கூடிய இந்தத் திட்டம், ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) மூலம் ஓய்வுக்குப் பிறகு பென்ஷன் வசதியையும் உறுதி செய்கிறது.

Advertisment

இ.பி.எஃப். என்பது ஊழியர்கள் ஓய்வுபெறும்போது பெரிய தொகையை சேமிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியரின் சம்பளம் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்புடன் ஓய்வூதியத் தொகை சேகரிக்கப்படுகிறது.

இ.பி.எஃப். பங்களிப்பு எவ்வாறு செய்யப்படுகிறது?

ஊழியரின் அடிப்படைச் சம்பளத்தில் 12% தொகை இ.பி.எஃப்.க்கு செலுத்தப்படுகிறது. நிறுவனமும் ஊழியரின் அடிப்படைச் சம்பளத்தில் 12% பங்களிக்கிறது. நிறுவனம் செலுத்தும் 12% தொகையில், 8.33% ஊழியர் ஓய்வூதிய திட்டத்திற்கும் மீதமுள்ள 3.67% தொகை மட்டுமே இ.பி.எஃப் கணக்கிலும் வரவு வைக்கப்படுகிறது. தற்போது, இந்த இ.பி.எஃப். சேமிப்புக்கு அரசு 8.25% வருடாந்திர வட்டி வழங்குகிறது.

உதாரணத்துடன் விளக்கம்:

ஒரு ஊழியரின் மாதச் சம்பளம் ரூ.64,000 என்று வைத்துக்கொள்வோம். இதில், அடிப்படைச் சம்பளம் ரூ.31,900. ஊழியரின் பங்களிப்பு (12%): மாதம் ரூ.3,828, நிறுவனத்தின் பங்களிப்பு (3.67%): மாதம் ரூ.1,172, மொத்த மாதச் சேமிப்பு: ரூ.5,000 (இ.பி.எஃப்.கணக்கில்)

நீண்ட காலப் பலன்:

Advertisment
Advertisements

ஒருவர் தனது 25-வது வயதில் வேலைக்குச் சேர்ந்து, 58 வயது வரை (33 ஆண்டுகள்) தொடர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், அவரது எதிர்காலம் பொன்னானதாக அமையும். சம்பளம் ஆண்டுக்கு 10% அதிகரிக்கும் என வைத்துக் கொண்டால், அதற்கு ஏற்ப இ.பி.எஃப் பங்களிப்பும் அதிகரிக்கும். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இதன் மூலம், ஓய்வுபெறும் வயதில் (58 வயதில்), அந்த ஊழியரின் இ.பி.எஃப் கணக்கில் சுமார் ரூ.3.5 கோடி என்ற பெரிய தொகை சேர்ந்திருக்கும். இக்காலகட்டத்தில், ஊழியர் மற்றும் நிறுவனம் இணைந்து முதலீடு செய்த மொத்த தொகை ரூ.1.33 கோடி மட்டுமே.

ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) பயன்:

நிறுவனம் வழங்கும் பங்களிப்பில் 8.33% EPS-க்கு செல்வதால், ஊழியருக்கு ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும். தற்போதைய விதிகளின்படி, குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை மாதம் ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணியின் காலம் மற்றும் ஓய்வூதியத்திற்குரிய சம்பளம் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.

இ.பி.எஃப். ஏன் ஒரு பாதுகாப்பான முதலீடு?

இ.பி.எஃப் முற்றிலும் அரசால் ஆதரிக்கப்படும் ஒரு திட்டம். இது சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாது. வட்டி விகிதங்கள் மாறினாலும், இது ஓய்வுக்காலத்திற்கான மிகவும் நம்பகமான முதலீட்டு வழி. உங்கள் பணியின் தொடக்கத்திலிருந்தே இ.பி.எஃப்.-இல் சரியாக முதலீடு செய்தால், உங்கள் ஓய்வுக்காலம் நிம்மதியானதாக அமையும். மாதத்திற்கு ரூ.5,000 என்ற சிறிய முதலீடு, உங்கள் ஓய்வூதியத்தில் கோடிக்கணக்கான தொகையை ஈட்ட உதவும்.

Epf

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: