New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/11/epfo-3.jpg)
ஆதார் எண்ணை இணைக்காத பட்சத்தில், உங்கள் நிறுவனம் செலுத்தும் தொகை கணக்கிற்கு வந்து சேராது
தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டம் செயல்படுகிறது. ஊழியரும், நிறுவனமும் கணிசமான தொகையை, இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.
இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதாலும்,வரிச்சலுகை கிடைப்பதாலும், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், இந்த இபிஎஃப் கணக்கில் முக்கிய ஆவணம் ஒன்றை இணைக்காவிட்டால் பணம் செலுத்தப்படாது என்ற அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும், தங்களது ஆதார் அட்டையை கட்டாயம் இணைக்க வேண்டும் என epfo தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு PF கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியாகியது
அதன்படி, ஓரிரு நாள்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இனிமேல் காலஅவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை இணைக்காத பட்சத்தில், உங்கள் நிறுவனம் செலுத்தும் தொகை கணக்கிற்கு வந்து சேராது. பணம் கணக்கிற்கு வருவதிலும் தாமதம் ஏற்படும். கூடுதலாக,கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்
PF கணக்குடன் ஆன்லைனிலேயே ஆதார் எண் இணைப்பது எப்படி?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.