Advertisment

EPFO உயர் பென்ஷன் காலக்கெடு மேலும் 3 மாதத்துக்கு நீட்டிப்பு?

EPFO உயர் பென்ஷன் காலக்கெடு 3 மாதங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EPFO likely to extend the deadline for higher EPS pension by three months

இபிஎஃப் ஒரு கட்டாய ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும்.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதிக இபிஎஸ் ஓய்வூதியத்திற்கான காலக்கெடுவை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (இபிஎஸ்) உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் போது பல ஊழியர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக புகார் தெரிவித்து வருவதால் இந்த நீட்டிப்பு வர வாய்ப்புள்ளது.

மேலும், பல்வேறு விதிகளில் தெளிவின்மை, EPFO திட்டத்தில் இருந்து தாமதமான தெளிவுபடுத்தல்கள் என சிக்கல்கள் தொடர்வதால் ஊழியர்கள் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

இதற்கிடையில் உயர் பென்ஷனுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். அந்த வகையில் மேலும் 3 மாதங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Epfo Epfo Alert Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment