/tamil-ie/media/media_files/uploads/2019/02/a547.jpg)
ஃபெடரல் வங்கி புதிய வட்டி விகிதங்கள் ஜன.17,2024ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளன.
கேரளத்தின் அலுவா மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ஃபெடரல் வங்கி என்ற தனியார் வங்கி இயங்கிவருகிறது. இந்த வங்கி தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தி உள்ளது.
இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஜன.17,2024ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. தொடர்ந்து, 500 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு திட்டங்களுக்கு 7.75 சதவீதம் வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 8.25 சதவீதம் வட்டியும் கிடைக்கும்.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வட்டி விகிதம் 500 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.75% ஆகவும், வயதானவர்களுக்கு 8.25% ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. ஃபெடரல் வங்கி சூப்பர் சீனியர்களுக்கு 500 நாள் டெபாசிட்டுக்கு 8.40% அதிகபட்ச வருமானத்தை வழங்குகிறது.
அதே நேரத்தில் திரும்பப் பெற முடியாத நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதம் பொது மக்களுக்கு 7.90% ஆக உயர்த்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெடரல் வங்கி டிசம்பர் 31, 2023 நிலவரப்படி அதன் முழு வணிகம் ரூ. 438776.39 கோடி ஆகும். முந்தைய ஆண்டின் காலாண்டில் இருந்து 18.72% அதிகம் ஆகும்.
மொத்த வைப்புத்தொகை ரூ. டிசம்பர் 31, 2022 அன்று 201408.12 கோடியாகவும், டிசம்பர் 31, 2023 அன்று 239591.16 கோடியாகவும் உள்ளது.
தொடர்ந்து, அதன் சில்லறை விற்பனை முன்பணம் 20.39 % அதிகரித்து 65041.08 கோடியை எட்டியுள்ளது. இயக்க லாபம் ஆண்டுக்கு ஆண்டு 12.80% வியக்கத்தக்க வகையில் மேம்பட்டது. டிசம்பர் 31, 2023 நிலவரப்படி, நிகர வட்டி வருமானம் 8.53% அதிகரித்துள்ளது, Q3FY23 இல் ரூ.1956.53 கோடியிலிருந்து Q3FY24 இல் ரூ.2123.36 கோடியாக இருந்தது. வங்கியின் ஒட்டுமொத்த வருமானம் 32.72% அதிகரித்து உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.