Advertisment

சத்தியமா நம்புங்க.. இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் பென்ஷன்!

மாதம் 15,159 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 1,50,003 ரூபாய் பென்ஷன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
finance in tamil finance news

finance in tamil finance news

finance in tamil finance news : மிடில் கிளாஸ் குடும்பங்கள் தொடங்கி முதலீடு செய்ய காத்திருக்கும் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் இந்த தகவல் மிக மிக பயனுள்ளது. உங்களுக்கு நிரந்த வேலை, நிரந்த வருமானம் இல்லையென்று கவலைப்படாதீர்கள். இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் கண்ணை மூடிக்கொண்டு மாதம் 1 லட்சம் வரை பென்ஷம் பார்க்கலாம். நம்புங்க.

Advertisment

என்ன திட்டம் அது?

எஸ்பிஎஸ். இந்த திட்டத்தில் எவ்வளவு முன்கூட்டியே முதலீட்டைத் தொடங்குகிறார்களோ அவ்வளவு அதிகமான லாபத்தைப் பார்க்கலாம். இந்த தேசிய பென்ஷன் திட்டம் ஒரு விருப்ப ஒய்வூதிய திட்டம். யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 60 வ்யதுக்கு பிறகு மாதம் பென்ஷன் பெறலாம். முதலீடு செய்யும் பணத்திற்கு வரி விலக்கும் உண்டு.

அடையாள மற்றும் முகவரிச் சான்று,பிறந்த தேதிக்கான சான்றிதழ் இருந்தால் போதும். நீங்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில், நீங்கள் முதலீடு செய்யும் பணம், ஃபிக்சட் டெபாசிட், சிறு சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்யப்படும். ஒரு வேலை இந்த முதலீட்டை உங்களால் நிர்வகிக்க முடியாது என்றால் ஃபண்டு நிர்வாகிகளைத் தேர்வு செய்துக்கொள்ளாம்.ஃபண்டு நிர்வாகிகள் சந்தை சூழலுக்கு ஏற்றவாறு உங்கள் பணத்தைப் பிரித்து முதலீடு செய்து லாபம் அளிப்பார்கள்.

1000 ரூபாய் 30 ஆண்டுகள் கழித்து என்ன மதிப்பை அளிக்கும் என்பதை அறிந்து முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

இன்று 30 வயதாகும் ஒருவர் எம்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து அவருக்கு 60 வயதாகும் போது ஆண்டுக்கு 10 சதவீத லாபத்துடன் மாதம் 20 ஆயிரம், 30 ஆயிரம், 40 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம், 1 லட்சம், 1.5 லட்சம் ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும். அது நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பொருத்தது.

எடுத்துக்காட்டாக,என்பிஎஸ் மாதம் 7,580 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 75,006 ரூபாய் பென்ஷனாக பெறலாம். மாதம் 10,106 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 1,00,002 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.

மாதம் 15,159 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 1,50,003 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.

ரூ. 100 போதும் அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்கள்.. எஸ்பிஐ-யில் வட்டி கிடைக்கும்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment