தமிழகத்தில் 200 மில்லியன் டாலர் மின்னணு ஆலை: ஃபாக்ஸ்கான் அமைக்கவுள்ளதாக தகவல்

தமிழகத்தில் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு ஆலையை ஃபாக்ஸ்கான் அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு ஆலையை ஃபாக்ஸ்கான் அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
Foxconn

Foxconn

தைவானின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமானது, தமிழ்நாட்டில் சென்னையில் எலக்ட்ரானிக் கூறுகள் ஆலையை அமைக்க $200 மில்லியன் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கையின்படி, Foxconn Industrial Internet (FII) இன் CEO பிராண்ட் செங் மற்றும் பிற நிறுவன பிரதிநிதிகள் கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற அரசு அதிகாரிகளை சந்தித்து தென் மாநில முதலீடு குறித்து விவாதித்தனர்.

இந்த வசதிக்காக ஆரம்பத்தில் $180 மில்லியன் முதல் $200 மில்லியன் வரை முதலீடு செய்வதற்கான திட்டத்தை எஃப்ஐஐ மாநில அதிகாரிகளுடன் பகிர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் ஆதாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
தைவானை தளமாகக் கொண்ட நிறுவனம் 2024 ஆம் ஆண்டிற்குள் ஆலையை முடிக்க இலக்கு வைத்துள்ளது, மேலும் முதலீடுகள் பின்னர் எதிர்பார்க்கப்படுகின்றன. எனினும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

Foxconn Industrial Internet ஆனது தகவல் தொடர்பு, மொபைல் நெட்வொர்க் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் உபகரணங்களை உருவாக்குகிறது.
ஃபாக்ஸ்கான் ஏற்கனவே சென்னைக்கு அருகில் ஒரு பரந்த வளாகத்தைக் கொண்டுள்ளது, அங்கு அது ஆப்பிள் ஐபோன்களை அசெம்பிள் செய்கிறது.

Advertisment
Advertisements

கடந்த வாரம், தென்னிந்தியாவில் உள்ள கர்நாடகா மாநில அரசு, புதிய ஆலைக்காக $1.07 பில்லியன் முதலீடு செய்ய உறுதியளித்த FII உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறியது.
இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் நுழைவதைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துடனும் ஃபாக்ஸ்கான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: