தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 15-ந் தேதி தங்கம் விலை மளமளவென சரிந்து ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை கடந்த 2 நாட்களாக மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.71,360-க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில், வார தொடக்க நாளான திங்களன்று காலையும், மாலையும் என இருவேளையும் தங்கம் விலை உயர்ந்தது. இதையடுத்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும் கிராம் ரூ.9,060-க்கும் விற்பனையானது. இதையடுத்து நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,080-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,640-க்கும் விற்பனையாகிறது.
இந்நிலையில், இன்று (ஜூன் 04) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.9,090க்கு விற்பனை ஆகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நீண்ட நாள்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட வெள்ளி விலை, நேற்று கிராமுக்கு ரூ. 2 அதிகரித்த நிலையில், இன்றும் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 114 ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,14,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.