/indian-express-tamil/media/media_files/dHaMQXSwhQlCki0rcR4K.jpg)
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் தங்க நகைகள் வாங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த 3 ஆம் தேதி வரை தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.8, 560-க்கும், ஒரு சவரன் ரூ.68, 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், கடந்த 4 முதல் 8 ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.335 மற்றும் சவரனுக்கு ரூ.2,680 என அதிரடியாக குறைந்தது காணப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று முன்தினம் வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.150, சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8, 560-க்கும், ஒரு சவரன் ரூ.68, 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.185, சவரனுக்கு ரூ.1,480 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8, 745-க்கும், ஒரு சவரன் ரூ.69, 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று சனிக்கிழமை தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு ரூ . 25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,770-க்கும், சவரனுக்கு ரூ. 200 ரூபாய் ஒரு சவரன் ரூ.70,160-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,10,000 விற்பனை செய்யப்படுகிறது
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் தங்க நகைகள் வாங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.