/indian-express-tamil/media/media_files/EFtjeQytrgzH2zCef4ul.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.
Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. செய்யவாய்கிழமை மீண்டும் சவரனுக்கு ரூ. 40 உயர்ந்தது. ஆனால், புதன்கிழமை சவரனுக்கு ரூ.320 அதிரடியாக சரிந்தது.
இதன்பின்னர், வியாழக்கிழமை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி புதன்கிழமை விலையிலே நீடித்தது. ஆனால், நேற்று வெள்ளிக்கிழமை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 44,000-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள நிலையில் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,032-க்கும், ஒரு சவரன் ரூ. 48,256-க்கும் விற்பனையாகியது.
வெள்ளி விலை
தங்கம் விலை போல் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை ரூ.70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 78.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 78,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.