/indian-express-tamil/media/media_files/dHaMQXSwhQlCki0rcR4K.jpg)
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை போல் தங்கம், வெள்ளி விலையும் தினசரி அடிப்படையில் சர்வதேச சூழல் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்தாண்டு தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீன போர் காரணமாக தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. சவரன் ரூ.50,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு தினங்களாக சற்று குறைந்து, ஏறியும் இருந்த தங்கம் விலை இன்று (மே 18) ஒரே நாளில் சவரன் ரூ.640 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து ரூ.54,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.6,850க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.96.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி இரண்டும் தினமும் தினம் புதிய உச்சங்களைத் தொடுவது நடுத்தர வர்க்க மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.