Google Pay Provide Gold Loan: கூகுள் நிறுவனம் இந்தியாவிற்கான வருடாந்திர நிகழ்வான ‘கூகுள் ஃபார் இந்தியா’ நிகழ்ச்சியில், GPay மூலம் ரூ. 50 லட்சம் வரை தங்கக் கடன் பெறலாம், தனிநபர் கடன் வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு என பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
கூகுள் ஃபார் இந்தியா நிகழ்ச்சியில் வெளியிட்ட அறிவிப்பின்படி, உங்கள் வீட்டில் தங்கம் இருந்தால், Google Pay-யில் ரூ.50 லட்சம் வரை தங்கக் கடனாகப் பெறலாம். தனிநபர் கடனுக்கான வரம்பு 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், கூகுள் அதன் செயற்கை நுண்ணறிவு (AI) ஜெமினியை இந்தியாவில் அப்டேட் செய்துள்ளது. ஜெமினி இப்போது இந்தி உட்பட 8 இந்திய மொழிகளில் வேலை செய்யும் என்று தெரிவித்துள்ளது.
அதாவது, கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வில் இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு, தமிழ், உருது ஆகிய 8 மொழிகளில் ஜெமினி சேவை கிடைக்கிறது.
கூகுள் தேடலின் AI மேலோட்டம் இப்போது இந்திக்கு கூடுதலாக பெங்காலி, மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட யு.பி.ஐ மூலம் இயங்கும் கூகுள் பே இப்போது முத்தூட் ஃபைனான்ஸ் உடன் இணைந்து தங்கத்துடன் கூடிய பாதுகாப்பான கடன்களையும் வழங்க உள்ளது. கடன் செயல்முறை என்னவாக இருக்கும், எப்படி கிடைக்கும் என்பது பற்றிய தகவலை Google இன்னும் வெளியிடவில்லை.
கூகுள் பே வழியாக அளிக்கப்படும் தனிநபர் கடனின் வரம்பை 5 ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், Google Pay UPI Circle அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பணம் செலுத்தும் பயனர் தனது UPI கணக்கிலிருந்து மற்றொரு நபருக்கு தேவையான வரம்புடன் பரிவர்த்தனைகளை அனுமதிக்க முடியும்.
Google Merchant Center-ல் உள்ள புதிய AI கருவிகள், படத்திலிருந்து வீடியோ அனிமேஷன்கள் போன்றவை, வணிகங்கள் தங்கள் தயாரிப்புகளை மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் காட்சிப்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல், ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) அடையாள அட்டைகள் Google Wallet-ல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூகுள் லென்ஸ் இப்போது வீடியோ தேடலை அனுமதிக்கும், மேலும் கூகுள் மேப்ஸ் இப்போது AI-உதவி இட தகவல்கள், வானிலை தகவல் மற்றும் "கருப்பொருள் கொண்ட பிறந்தநாள் கேக்குகள்" அல்லது "தனித்துவமான சுற்றுலா இடங்கள்" போன்றவற்றைக் கண்டறியும் திறனைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Google Play Protect-ல் மோசடிப் பாதுகாப்பிற்காக புதிய அம்சங்கள் சோதிக்கப்படும். 2025ல் இந்தியாவில் புதிய Google பாதுகாப்பு பொறியியல் மையம் (GSEC) தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“