இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு மிக அவசியமான ஒன்றாக உள்ளது. நல்ல வருவாய் லாபம் கிடைக்கக்கூடிய குறுகிய கால சேமிப்பு திட்டத்தை தேடிக் கொண்டிருப்பவர்களுக்குக் கண்டிப்பாக இந்த திட்டம் கைகொடுக்கும். பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்பினால் சரியான தேர்வு தபால் அலுவலக சேமிப்பு தான். ஏராளமான போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் வங்கிகளின் Fixed deposit ஐ விட அதிக பலன் தருகிறது
அந்த வகையில் , போஸ்ட் ஆபிஸ் வழங்கும் இந்தப் புதிய திட்டத்தில், ஒரு முறை நீங்கள் பணம் செலுத்தினால் போதும், வட்டி தொகை மாதம்தோறும் பென்ஷனாக உங்களுக்கு கிடைத்துவிடும்.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் வந்ததும், நீங்கள் செலுத்திய முதலீட்டு தொகை திருப்பி அளிக்கப்படும். தற்சமயம் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களின் வட்டி விகிதம் 6.6 ஆக உள்ளது.
அந்த வட்டி விகிதத்தன் அடிப்படையில், உங்களது தொகை மாதந்தோறும் கிடைத்திடும்.
இதில் அதிகபட்சமாக ஒருவர் ரூ.4.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். இணைப்புக் கணக்கில் ரூ.9 லட்சம் வரையில் சேமிக்கலாம். இதன் முதிர்வு காலம் வெறும் 5 வருடங்கள் மட்டும் தான்.
மாதாந்திர வருமான திட்டம் விவரங்கள்
- தனிநபராக அல்லது மூன்று பேர் இணைந்து கணக்கு தொடங்கலாம்
- நீங்கள் மைனராக இருக்கும் பட்சத்தில், பாதுகாவலர் உத்தரவாதத்தில் கணக்கு தொடங்கலாம். உங்களுக்கு 10 வயது பூர்த்தி அடைந்திருந்தால், உங்களது பெயரிலே கணக்கு தொடங்கலாம்
- இதில் சேர குறைந்தப்பட்சம் ரூபாய் 1000 செலுத்த வேண்டும்
- தனிநபர் அதிகபட்சமாக 4.5 லட்சம் ரூபாயும், மூன்று பேர் இணைந்த கணக்கில் 9 லட்சம் ரூபாயும் முதலீடு செய்யலாம்.
- அதே சமயம், இணைந்த கணக்கில் தனிநபரின் முதலீடு 4.5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்திடக்கூடாது.
பணம் கிடைப்பது எவ்வளவு
- இந்தத் திட்டத்தில் நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தியிருந்தால், மாதம் 275 ரூபாய் வட்டி தொகையாக பெறலாம். இந்த கணக்கில் 5 ஆண்டுகளுக்கு தலா ஒவ்வொரு ஆண்டும் 3,300 ரூபாய் வட்டி தொகையாக கிடைத்திடும்.
- அதே போல, 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், மாதம் 550 ரூபாயாக ஆண்டிற்கு 6600 ரூபாய் கிடைத்திடும். இதை கணக்கிட்டால், 5 ஆண்டுகளில் உங்களுக்கு 33 ஆயிரம் ரூபாய் வட்டி தொகையாக பெறமுடியும்.
- சுமார் 4.6 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால், மாதம் 2475 ரூபாய் விகிதம் என ஆண்டிற்கு 29 ஆயிரத்து 700 ரூபாய் வட்டி தொகையாக கிடைத்திடும். 5 ஆண்டுகளில், வட்டி தொகை மட்டும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 500 ரூபாய் கிடைத்திடும்.
- இந்த திட்டத்தின் கணக்கு தொடங்கும் பட்சத்தில், ஒரு ஆண்டிற்கு முன்பு பணத்தை எடுத்திட முடியாது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை க்ளோஸ் செய்தால், உங்களின் முதலீட்டு தொகையில் 2 விழுக்காடு கழித்து திருப்பி அளிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil