/tamil-ie/media/media_files/uploads/2023/08/Loan-for-vendors.jpg)
2020ல் இத்திட்டங்கள் தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் 39 லட்சம் பயனாளிகளுக்கு 50 லட்சம் கடன்களை வழங்கியுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், இந்த ஆண்டு டிசம்பர் வரை ஆறு மாதங்களுக்குள் 63 லட்சம் புதிய கடன்களை தெருவோர வியாபாரிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
2020ல் இத்திட்டங்கள் தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் 39 லட்சம் பயனாளிகளுக்கு 50 லட்சம் கடன்களை வழங்கியுள்ளது. இந்த பிரதான் மந்திரி தெரு வியாபாரிகள் ஆத்மாநிர்பர் நிதி (PM SVANidhi) கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் போது தொடங்கப்பட்டது.
அப்போது, தெரு வியாபாரிகளுக்கு தலா ரூ. 10,000 சிறிய செயல்பாட்டு மூலதனக் கடன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஜூலை 14 அன்று, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார செயலாளர் மனோஜ் ஜோஷி புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்தத் திட்டத்தின் கடன் காலத்தை டிசம்பர் 2024 வரை அமைச்சரவை நீட்டித்திருந்தாலும், இந்த இலக்குகள் திட்டமிடப்பட்ட 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் டிசம்பர் 2023 வரை இருக்கும்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, PM SVANidhi இணையதளத்தின்படி, 51.45 லட்சம் கடன்கள், 6,623.36 கோடி ரூபாய் வரை 39.07 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால கடன்களும் அடங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us