மாதந்தோறும் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மே மாதம் வசூலான ஜி.எஸ்.டி.யின் மதிப்பு ரூ.2.01 லட்சம் கோடி என செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இது முந்தைய மாதம் (ஏப்ரல்) வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டதை விட குறைவாகும். அதேநேரம் கடந்த ஆண்டு மே மாத வசூலை விட 16.4% அதிகம் ஆகும்.
கடந்த ஆண்டு மே மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த மாதம் மத்திய ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.35,434 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.43,902 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.09 லட்சம் கோடியாகவும் இருந்தது. செஸ் வரி மூலம் ரூ.12,879 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மே மாதத்தில் இறக்குமதி மூலம் ஜி.எஸ்.டி வசூல் 25.2% அதிகரித்து ரூ.51,266 கோடியாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி ஜி.எஸ்.டி வசூல் ரூ.46,913 கோடியாக இருந்தது. உள்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் மே மாதத்தில் 13.7% அதிகரித்து ரூ.1.50 லட்சம் கோடியாக இருந்தது, ஆனால் ஏப்ரல் மாதத்தில் ரூ.1.90 லட்சம் கோடியை விட குறைவாக இருந்தது. நிகர அடிப்படையில், ஜி.எஸ்.டி., வசூல், 20.4% அதிகரித்து, 1.74 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 16% அதிகமான வளர்ச்சி என்பது பொருளாதார மீட்சி இருப்பதை குறிக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/2025/06/gst-collection-826800.jpg)
இதற்கிடையே கடந்த மாதத்தில் திருப்பிச்செலுத்தப்பட்ட மொத்த தொகை ரூ.27,210கோடி அதாவது 4% ஆக இருந்ததாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்திற்கான மாநில வாரியான தரவுகள் 38 மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களில் மொத்த ஜி.எஸ்.டி வசூலில் தேசிய சராசரியான 16.4% வளர்ச்சி விகிதத்தை விட அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வசூல் 17-ல் இருந்து 25% ஆக உயர்ந்துள்ளது. இதைப்போல குஜராத், ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களும் 6% வரை வரி அதிகரிப்பை கொண்டிருந்தன. அதேநேரம் மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் சராசரியாக 10% நடுத்தர உயர்வை பெற்றிருந்தன.
மே மாதத்தில் ஜி.எஸ்.டி வசூலில் சரிவை பதிவு செய்த மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள்: ஆந்திரா ரூ 3,803 கோடி (-2%) உத்தரகண்ட் ரூ.1,605 கோடி (-13%), தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ரூ 351 கோடி (-6%), மிசோரம் ரூ.29 கோடி (-26%). எனவே நாடு முழுவதும் சராசரி வளர்ச்சி ஒரே மாதிரியாக பிரதிபலிக்கவில்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கு துறை சார்ந்த அல்லது பருவகால காரணிகள் காரணமாக இருக்கலாம் எனக்கூறியுள்ள அவர்கள், இதற்கு ஆழமான தரவு அடிப்படையிலான பகுப்பாய்வு தேவைப்படுவதாகவும் தெரிவித்து உள்ளனர்.