ஜி.எஸ்.டி. விலக்கு: இன்ஷூரன்ஸ் பிரீமியம் குறையுமா, கூடுமா? ஷாக் ரிப்போர்ட்

கோட்டக் இன்ஸ்டிட்யூஷனல் ஈக்விட்டிஸ் ரிசர்ச்-ன் சமீபத்திய அறிக்கை, உள்ளீட்டு வரிக் கடன் (ITC) இல்லாததால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை 5% வரை உயர்த்தக்கூடும் எனத் தெரிவிக்கிறது.

கோட்டக் இன்ஸ்டிட்யூஷனல் ஈக்விட்டிஸ் ரிசர்ச்-ன் சமீபத்திய அறிக்கை, உள்ளீட்டு வரிக் கடன் (ITC) இல்லாததால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை 5% வரை உயர்த்தக்கூடும் எனத் தெரிவிக்கிறது.

author-image
WebDesk
New Update
gst cut on life and health insurance policies

GST cut backfired? your health insurance premium may go up by up to 5 pc, says report

சமீபத்தில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டு பிரீமியங்களுக்கான வரி முழுமையாக விலக்கப்பட்டு, 18% இலிருந்து 0% ஆக குறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, பாலிசிதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் அளிக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே, காப்பீட்டுத் துறை வல்லுநர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தத் தொடங்கினர். இந்த விலக்கு, உண்மையில் பாலிசிதாரர்களுக்கு நன்மையளிப்பதற்குப் பதிலாக, பிரீமியம் தொகையை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

வரியை குறைத்தாலும் பிரீமியம் ஏன் உயரும்?

Advertisment

பொதுவாக, ஒரு நிறுவனம் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு வரி செலுத்துகிறது என்றால், அந்த வரியை திரும்பப் பெறும் வசதி உண்டு. இதற்கு உள்ளீட்டு வரி கடன் (ITC) என்று பெயர். காப்பீட்டு நிறுவனங்கள், தங்கள் சேவைக்காக விளம்பரம், விநியோக கமிஷன் போன்றவற்றுக்கு செலுத்தும் ஜிஎஸ்டி வரியை, இந்தக் கடன் மூலம் திரும்பப் பெறுகின்றன.

ஆனால், இப்போது பிரீமியத்திற்கு ஜிஎஸ்டி இல்லை என்பதால், உள்ளீட்டு வரி கடன் வசதியை காப்பீட்டு நிறுவனங்கள் பயன்படுத்த முடியாது. இதனால், அவர்கள் செலுத்தும் வரி இழப்பாகும். இந்த இழப்பை ஈடுகட்ட, காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் தொகையை 3-5% வரை உயர்த்தக்கூடும் என்று கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் ரிசர்ச் அறிக்கை கூறுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு லாபமா, நஷ்டமா?

வரியை ரத்து செய்ததன் மூலம் பிரீமியம் 12-15% வரை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், நிறுவனங்கள் உயர்த்தும் 3-5% தொகையையும் சேர்த்தால், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் உண்மையான குறைப்பு சுமார் 12-15% ஆக இருக்கும் என்று அந்த அறிக்கை சொல்கிறது.

Advertisment
Advertisements

ஒருபுறம், காப்பீட்டு பிரீமியம் குறைவது, காப்பீடு எடுக்கத் தயங்கும் பலரை ஈர்க்கக்கூடும். இது சுகாதார காப்பீட்டுக்கான தேவையை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வரி விலக்கு தனிநபர் பாலிசிகளுக்கு மட்டுமே பொருந்தும், பிற நிறுவன பாலிசிகளுக்கு பொருந்தாது.

இந்த முடிவு, வரும் செப்டம்பர் 22, 2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த இந்த தைரியமான முடிவு, காப்பீட்டுத் துறையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: