இந்த வருடம் முதல் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.1 % உயர்த்தியுள்ளதாக எச்டிஎப்சி அறிவித்துள்ளது.
ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் தான் வங்கிகள் கடன் திட்டங்கள் மீதான
வட்டி விகிதத்தை உயர்த்தும். இருந்தும் எச்டிஎப்சி வங்கி வட்டியை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
hdfc வங்கியின் இந்த அறிவிப்பினால் வீட்டுக் கடன் பெற்றவர்களின் தவணை செலவு
அதிகரிக்கும். மேலும் இந்த வட்டி விகித உயர்வு ஜனவரி முதல் வாரத்தில் இருந்தே அமலுக்கு
வந்துள்ளது.
இந்நிலையில், எச்டிஎப்சி வங்கியின் இந்த முறையை பிற வங்கிகளும் பின்பற்ற வாய்ப்புகள்
உள்ளதாக கூறப்படுகின்றது.மேலும் hdfc – வாங்கி வழங்கி வந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு கடன், தற்போது 8.95 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.
இதில் (பெண்களுக்கு 8.90%). 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு
கடன் தற்போது 9.10 சதவீத வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது (பெண்களுக்கு
9.05%).வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.