ஹெச்.டி.எஃப்.சி டிஃபென்ஸ் ஃபண்ட், பாதுகாப்புத் துறையில் கவனம் செலுத்தும் மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இந்தப் ஃபண்டு முதலீட்டாளர்களின் பணத்தை ஒன்பது மாதங்களில் இரட்டிப்பாக்கி உள்ளது. அதாவது, இந்தப் ஃபண்ட் கடந்த 9 மாதங்களில் 102.26% வருமானத்தை அளித்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி டிஃபென்ஸ் ஃபண்டு
இந்தத் திட்டம் கடந்த மூன்று மாதங்களில் தோராயமாக 38.87% மற்றும் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 55.16% வருவாயை அளித்துள்ளது. கடந்த ஆண்டில், இந்தத் திட்டம் 130.44% வருமானத்தை அளித்துள்ளது.
அதாவது, ஒரு முதலீட்டாளர், ஃபண்டின் தொடக்கத்திலிருந்து ரூ. 10,000 மாதாந்திர SIP ஐத் தொடங்கியிருந்தால், முதலீடு இப்போது ரூ. 2.28 லட்சமாக இருக்கும்.
இந்த ஃபண்டின் தொடக்கத்திலிருந்து முதலீட்டாளர் செய்த ரூ. 1 லட்சத்தின் ஆரம்ப மொத்த முதலீடு இப்போது ரூ. 2.45 லட்சமாக இருக்கும், இது 122.95% சிஏஜிஆர் காம்பவுண்ட் வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை காண்கிறது.
மோதிலால் ஓஸ்வால் ஃபண்டு
இந்நிலையில், மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் சமீபத்தில் பாதுகாப்புத் துறையின் அடிப்படையில் அதன் இன்டெக்ஸ் (குறியீட்டு நிதி) ஃபண்ட்டை அறிமுகப்படுத்தியது.
மோதிலால் ஓஸ்வால் நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் இன்டெக்ஸ் ஃபண்ட் என்பது இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள பாதுகாப்புப் பங்குகளை வெளிப்படுத்தும் இந்தியாவின் முதல் குறியீட்டு நிதியாகும். பாதுகாப்புத் துறையின் வளர்ச்சித் திறனில் பங்குபெற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிப்பதை இந்த நிதியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் ஃபண்டு நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் இன்டெக்ஸ் டிஆர்ஐக்கு எதிரான ஒரு திறந்தநிலை நிதியாகும், இது ஸ்வப்னில் மாயேகர் மற்றும் ராகேஷ் ஷெட்டி ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை ரூ. 500 மற்றும் அதற்குப் பிறகு ரூ. 1 இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்டு திட்ட முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. ஆகவே, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விதிமுறைகளையும் கவனமாக படிக்கவும். மேற்கூறிய தரவுகள் கடந்தகால வருவாய் மட்டுமே; இது நிகழ்கால வருவாய்க்கு எவ்விதத்திலும் உறுதியளிக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“