/tamil-ie/media/media_files/uploads/2019/02/SBI-cuts-rates-on-home-loans.jpg)
sbi loans
வங்கியில் பெற்றுக்கொள்ளப்படும் வீட்டுக்கடன் மூலம் நாம் நினைக்கும் வீட்டை வாங்கி மாதம் மாதம் தவணை முறையில் சில குறிப்பிட்ட தொகையை இஎம்ஐ யாக செலுத்துவோம். இவ்வாறு செலுத்தப்படும் மாத தவணை குறைந்தது பத்து ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக முப்பது ஆண்டுகள் வரை நீட்டித்து, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாத தவணை தொகை செலுத்தப்படுகின்றது.
வங்கியால் நிர்ணயிக்கப்படும் காலப்பகுதியில், கடன் பெற்றவருக்கு எதாவது நேர்ந்தாலோ அல்லது மாத தவணை கட்ட முடியவில்லை என்றாலோ கடன் மறு சீரமைப்பு மூலம், கடனை கட்ட கால அவகாசம் வழங்கப்படும் அல்லது மாற்று முறைக்கு வழி வகுக்கிறது.
இந்நிலையில், நாம் வாங்கும் சொத்துக்கு நம் குடும்த்தின் மீது சுமை கொடுக்காமல் இருக்க, நாம் செய்ய வேண்டியது காப்பீடு எடுத்துக் கொள்வதுதான். அதுவும் நாம் வங்கியில் பெற்றுக்கொண்டுள்ள பணத்தை விட அதிகமான தொகையில் வீடுகளுக்கான டெர்ம் காப்பீடு செய்ய வேண்டும். இதன் மூலம் உயிரிழப்பு அல்லது பணத்தை கட்ட முடியாத சூழ்நிலை வரும் போது, இந்த காப்பீடு நமக்கு பேருதவி செய்யும்.
வீட்டு கடன் தவணைகளை செலுத்தும்போது வரக்கூடிய எதிர்பாராத சங்கடங்களை சமாளிக்க காப்பீடு அவசியம். எனவே வீட்டு கடன் அளிக்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களுக்கு உதவும் விதமாக ‘பில்ட் இன்’ காப்பீடு திட்டங்களை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் லாபம் பார்க்க நீங்கள் செல்ல வேண்டிய வங்கி எது தெரியுமா?
இந்நிலையில், வீட்டுக்கடன் பெற்று வீடு கட்டும் போது, இது போன்ற காப்பீடு எடுத்து வைத்து இருந்தால், சமாளிக்க முடியாத சூழலில் நம் வாரிசுகளுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் வீடு கிடைத்து விடும். ஆனால் வீட்டுக்கடன் பெறும் போது காப்பீடு மிக முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.