/tamil-ie/media/media_files/uploads/2023/05/ls-finance-accounting-paper-desk-using-3.jpg)
ஒருவர் எத்தனை வங்கி கணக்குகள் வைத்துக் கொள்ளலாம்
வங்கிகள் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வசதிகளை வழங்குகின்றன. இதில் சேமிப்பு கணக்கை தனிநபர்கள் தொடங்கலாம்.
நடப்பு கணக்கு வியாபார நோக்கிற்காக தொடங்கி பராமரிக்கப்படுகிறது. இந்த நடப்பு கணக்கில் வட்டி கிடையாது. வட்டி சேமிப்பு கணக்கில் மட்டுமே கொடுக்கப்படும்.
மேலும் வங்கிகளை பொறுத்தவரை, பொதுத்துறை, தனியார், ஸ்மால் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு விதமாக வட்டியை வழங்குகின்றனர்.
தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அக்கெளண்டில் தொடர வேண்டும் என்றும் கூறுகின்றனர். இந்தத் தொகையை மாதந்தோறும் தொடராவிட்டால் அதற்கு வங்கிகள் அபராதம் விதிக்க நேரிடும்.
மேலும், கடந்த காலத்தில் இருந்து ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். புதிய ரிசர்வ் வங்கி கொள்கையும் இதனை ஆதரிக்கிறது.
ஆகவே ஒருவர் எத்தனை சேமிப்புக் கணக்கு வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். அதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.