இந்தியாவில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் பிறந்த குழந்தைக்கு கூட வங்கிக் கணக்கு உள்ளது.
ஆனால் ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்துக் கொள்ளலாம் என்ற ஆர்.பி.ஐ விதியை அறிந்தது உண்டா.. என்றால் பலருக்கும் இது பற்றி தெரிவதில்லை.
பொதுவாக சம்பள வங்கிக் கணக்கு தவிர மற்ற வங்கிக் கணக்குகளில் அந்த வங்கி நிர்ணயித்துள்ள தொகையை மினிமம் பேலன்ஸ் ஆக கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் ஒரு குறிப்பிட்ட நாள்களுக்குள் இத்தனை பரிவர்த்தனைகள் செய்திருக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது.
அதேநேரத்தில் ஒருவர் இத்தனை வங்கிக் கணக்குகள்தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.
ஆனால் வருங்காலத்தில் இதில் கட்டுப்பாடுகள் வரலாம் என சிலர் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“