போஸ்ட் ஆபிஸ்: ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன்?

இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், அவர்கள் ஒவ்வொரு மாதமும் வருமானம் ஈட்ட முடியும் மற்றும் அவர்களின் பணமும் பாதுகாப்பாக இருக்கும்.

இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், அவர்கள் ஒவ்வொரு மாதமும் வருமானம் ஈட்ட முடியும் மற்றும் அவர்களின் பணமும் பாதுகாப்பாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
post office schemes

மூத்த குடிமக்கள் பார்வையில் இந்த திட்டம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.

Post Office Savings Scheme | போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் ஒவ்வொரு மாதமும் வருமானத்தை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில், எந்தவொரு நபரும் ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் முதலீடு செய்யலாம்.
முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு ஒவ்வொரு மாதமும் வட்டி கிடைக்கும். இந்த வட்டியின் மூலம் வழக்கமான வருமானம் தொடர்ந்து வருகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் டெபாசிட் தொகை முழுவதும் திரும்பப் பெறுவீர்கள்.
தற்போது, POMIS மீதான வட்டி 7.4 சதவீதமாக உள்ளது. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், ரூ.5 லட்சம், 9 லட்சம் மற்றும் 15 லட்சம் டெபாசிட்களில் எவ்வளவு வருமானம் ஈட்டலாம் என்று பார்ப்போம்.

Advertisment

ரூ.5 லட்சம் முதலீடு

போஸ்ட் ஆபிஸ் எம்ஐஎஸ் கால்குலேட்டரின் படி, போஸ்ட் ஆபிஸ் எம்ஐஎஸ்-ல் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்தால், 7.4 சதவீத வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.3,083 சம்பாதிப்பீர்கள்.

ரூ.9-15 லட்சம் முதலீடு

Advertisment
Advertisements

அதேசமயம், அதிகபட்சமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.5,550 சம்பாதிக்கலாம். கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வட்டி பெறலாம்.

மற்ற விதிகள்

போஸ்ட் ஆபிஸ் எம்ஐஎஸ்-ல் முதிர்வுக்கு முன் பணம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஓராண்டுக்குப் பிறகு இந்த வசதி கிடைக்கும். ஆனால் அதற்கு முன் தொகையை எடுக்க விரும்பினால், அது சாத்தியமில்லை.
மேலும், முதிர்ச்சிக்கு முன் கணக்கு  மூடப்பட்டால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும். ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை பணத்தை எடுத்தால், டெபாசிட் தொகையில் 2 சதவீதம் கழிக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும்.
அதேசமயம், கணக்கைத் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், 5 ஆண்டுகளுக்கு முன்பும் நீங்கள் பணத்தை எடுக்க விரும்பினால், டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து 1 சதவீதத்தைக் கழித்த பிறகு வைப்புத் தொகை உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Post Office Savings Scheme

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: