/tamil-ie/media/media_files/uploads/2019/03/a867.jpg)
மத்திய அரசின் நிதி அமைச்சகம் சிறுசேமிப்பு திட்டங்களில் பெறப்படும் வட்டியை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்கிறது.
recurring-deposit-account | post-office-savings-scheme | அஞ்சல் அலுவலகத்தின் 5 ஆண்டு தொடர் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசாங்கம் உயர்த்தி உள்ளது.
மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்.டி திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில் கவர்ச்சிகரமான வட்டிகள் உள்ளன. நீங்கள் போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி-யில், முதலீடு செய்தால் உங்களுக்கு 6.7சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கும். இந்த வட்டி விகிதங்கள் 5 ஆண்டு ஆர்.டி முதலீட்டுக்கு கிடைக்கின்றன.
அந்த வகையில் நீங்கள் மாதம் தோறும் ரூ.2000 வீதம், ஐந்து ஆண்டுகள் சேவித்தால் எவ்வளவு தொகை ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
ரூ.2,000 முதலீடு
நீங்கள் 5 ஆண்டுகளுக்கு மாதம் 2,000 ரூபாய் RD ஐ தொடங்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு வருடத்தில் 24,000 ரூபாய் மற்றும் 5 ஆண்டுகளில் 1,20,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள்.
அத்தகைய சூழ்நிலையில், புதிய வட்டி விகிதத்துடன் அதாவது 6.7% வட்டியுடன் ரூ.22,732 வட்டியாகப் பெறுவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் முதலீடு செய்த தொகையும் வட்டித் தொகையும் சேர்த்து மொத்தம் ரூ.1,42,732 கிடைக்கும்.
மத்திய அரசின் நிதி அமைச்சகம் சிறுசேமிப்பு திட்டங்களில் பெறப்படும் வட்டியை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.