பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கூட்டு விருப்பத்தேர்வுகள் மற்றும் உயர் ஓய்வூதியங்களுக்கு உறுப்பினர்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை விவரிக்கிறது.
மேலும், தொழிலாளி மற்றும் முதலாளி சமர்ப்பித்த ஊதிய விவரங்கள் மற்றும் தகவல்களை ஆராய்வதற்கான நடைமுறையும் இதில் உள்ளது. அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க மே 3ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 23 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, கூட்டு விருப்பங்கள் மற்றும் உயர் ஓய்வூதியங்களுக்கான விண்ணப்பங்களை கள அலுவலகம் ஆய்வு செய்யும் என்று EPFO கூறியுள்ளது. தேவைகள் பூர்த்தியானால், முதலாளிகள் சமர்ப்பிக்கும் தகவல்கள் கள அலுவலகத்தால் சரிபார்க்கப்படும்.
தொடர்ந்து, செப்டம்பர் 1, 2014 அன்று அல்லது அதற்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதற்கான ஆன்லைன் அமைப்பையும் EPFO அமைத்துள்ளது.
EPFO ஆல் ஒரு குறை தீர்க்கும் வழிமுறையும் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரின் எந்தவொரு புகாரையும் EPFO இன் குறை மேலாண்மை அமைப்பில் சமர்ப்பிக்கலாம்.
நவம்பர் 4, 2022 தேதியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், குறிப்பிட்ட உயர் ஓய்வூதியம் என்ற பிரிவின் கீழ், புகார் பதிவு செய்யப்படும்.
. EPFO இன் படி, அத்தகைய புகார்கள் அனைத்தும் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரியால் தீர்க்கப்படும். விவரங்கள் பொருந்தவில்லை என்றால், உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (APFC) / பிராந்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் (RPFC)-II ஒரு மாதத்திற்குள் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவிப்பின் கீழ் முதலாளிகளிடமிருந்து விவரங்களைக் கேட்கும்.
அதன்பின் முழுமையான தகவல் கிடைத்தால், அதற்கான நிலுவைத் தொகையை அந்த அமைப்பு செயல்படுத்தும். விவரங்கள் வரவில்லை என்றால், தகுதி அடிப்படையில் உத்தரவு அனுப்பப்படும்.
மேலும், எந்தவொரு காரணத்திற்காகவும் அதிக ஓய்வூதியம்/கூட்டு விருப்பங்களுக்கான விண்ணப்பம் அங்கீகரிக்கப்படாவிட்டால், கூடுதல் தகவல்களை வழங்கவோ அல்லது ஓய்வூதியம் பெறுவோர் செய்த விவரங்கள் உட்பட ஏதேனும் விவரங்களை சரிசெய்யவோ முதலாளிக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“