அவசரமாக பயணம் செய்ய விரும்புகிறீர்களா? முன்பதிவு செய்யவில்லையா? ரயிலில் தட்கலில் புக் செய்து அவசரத்திற்கு பயணம் செய்யலாம். இதற்கு இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) இணையதளத்தின் ஆப் அல்லது பேடிஎம் போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை இந்திய ரயில்வேயில் தட்கல் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்ய பயன்படுத்தப்படலாம். ஆனால், தட்கல் டிக்கெட் வாங்கும் முன், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
தட்கல் டிக்கெட்டுகள் ரயிலின் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக பதிவு செய்யலாம். உதாரணமாக, ஏப்ரல் 1 ஆம் தேதி பயணிக்க விரும்புபவர்கள், தங்கள் டிக்கெட்டுகளை வாங்க மார்ச் 31 ஆம் தேதி காலை முதல் பதிவு செய்யலாம். ஏசி வகுப்புகளுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது, அதே நேரத்தில் ஏசி அல்லாத வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
தட்கல் டிக்கெட்டுகளுக்கான கட்டணம், இரண்டாம் வகுப்பிற்கான அடிப்படை கட்டணத்தில் 10% மற்றும் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் அடிப்படை கட்டணத்தில் 30% என்ற விகிதத்தில் வசூலிக்கப்படுகின்றன. பயணம் முழுவதும் ரயிலின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தூரமும் டிக்கெட் விலையில் பிரதிபலிக்க கூடும்.
தட்கல் டிக்கெட்கள் தொடங்கப்படும் நேரம் முதல், ரயில் பயணிகள் அட்டவணை தயாரிக்கப்படும் வரை முன்பதிவு செய்யலாம் என்றாலும், அதிகமானோர் முன்பதிவுக்கு முயற்சி செய்வதால், தட்கல் பதிவுக்கான சரியான நேரத்தில் முயற்சிப்பது இருக்கை கிடைப்பதை உறுதி செய்யும். ஏனெனில் இருக்கை கிடைக்காமல், பயணத்தை ரத்து செய்தால் கட்டணம் திருப்பி அளிக்கப்படாது.
IRCTC தட்கல் ரயில் டிக்கெட் எப்படி பதிவு செய்வது?
தட்கல் செயல்முறை தொடங்குவதற்கு ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு முன்பு நீங்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் உள்நுழைய பரிந்துரைக்கப்படுகிறது. தட்கலுக்கு, ஒரு பிஎன்ஆரில் நான்கு பேருக்கு மேல் பதிவு செய்யக்கூடாது.
முன்பதிவு செய்ய, நீங்கள் தொடங்கும் இடம் மற்றும் சேருமிடத்தையும், நீங்கள் பயணிக்க விரும்பும் நாளையும் உள்ளிட வேண்டும்.
அடுத்து, 'தட்கல்' ஒதுக்கீட்டைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்களுக்கு விருப்பமான ரயிலுக்கு, ‘இப்போதே புக் செய்யவும்’ என்பதைத் தட்டவும்.
அதன் பிறகு, பயனர்கள் தங்கள் பெயர், வயது போன்ற தகவல்களை நிரப்ப வேண்டும்.
கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ‘உறுதிப்படுத்தப்பட்ட ஸ்லாட்டுகள் வழங்கப்பட்டால் மட்டுமே முன்பதிவு செய்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
திரையில் கேப்ட்சாவை (குறியீட்டை) நிரப்பவும்.
இறுதியாக, ஒரு கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய பணம் செலுத்துங்கள்.
தட்கல் முன்பதிவில், முக்கியமாக கவனிக்க வேண்டியது, டிக்கெட்டை ரத்துசெய்தால் பயனர்களுக்குப் பணம் திரும்பப் அளிக்கப்படாது.
தட்கல் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய IRCTC செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?
தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன், உங்கள் ஐஆர்சிடிசி கணக்கில் உள்நுழைய வேண்டும்.
ரயிலில் ஏறும் இடம், சேரும் இடம் மற்றும் பயணத் தேதியைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் 'சமர்ப்பி' பொத்தானை அழுத்தவும்.
அடுத்து, ஒதுக்கீடு வகையாக ‘தட்கல்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சரியான ரயிலைத் தேர்ந்தெடுத்து ‘இப்போதே புக் செய்யவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பெயர், வயது, பாலினம், விருப்பமான இருக்கை மற்றும் தொலைபேசி எண் போன்ற அத்தியாவசிய தகவல்களை நிரப்பவும்.
கேப்ட்சா குறியீட்டை பெட்டியில் உள்ளிடவும்.
Jio Money, Airtel Money, Ola Money, Mobikwik போன்ற மின்-வாலட் மூலம் அல்லது IRCTC e-wallet உடன் இணைக்கப்பட்ட வங்கிகள் மூலம் பணம் செலுத்தலாம். ஒரு பயனர் ஐஆர்சிடிசி இ-வாலட்டுடன் ஆறு வங்கிகள் வரை இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil